நாகை மாவட்டம், கொட்டாரக்குடியில் நமது கழகச் செயல் வீரராக பல ஆண்டுகள் தொண்டாற்றிய தோழர் குருசாமி என்ற திராவிட விவசாயத் தொழிலாளர் கொள்கை எதிரிகளால் கொலை செய்யப்பட்டார்.
அதைக் கண்டித்து கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு நடைபெற்ற வழக்கு நிறைவில் எதிரிகள் தண்டிக்கப்பட்டனர்.
அவரது வாழ்விணையர் கொட்டாரக்குடி இலட்சுமி முதுமை காரணமாக நேற்று (29.6.2025) மறைவுற்றார் என்பதை அறிய மிகவும் துயரம் அடைகிறோம்.
துணைவரை இழந்த இலட்சுமி அம்மையாருக்கு நாம் நேரில் ஆறுதல் கூறி – அவரது வாழ்வாதாரத்திற்கு 200 குழி நிலமும் இயக்கம் வாங்கித் தந்தது. அவரும் தொடர்ந்து இயக்க கொள்கை வீர நாயகியாகத் தொடர்ந்தார். ‘தான் இறந்தால் கழக முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும்’ என்று அவர் கூறியதாக அவரைப் பேட்டி கண்ட தோழர் வி.சி.வில்வம் பதிவு செய்துள்ளார்.
கழகப் பொறுப்பாளர்கள் அவரது இறுதி நிகழ்வை கொள்கை பூர்வமாக நடத்திடத் திரண்டனர்.
அப்படிப்பட்ட ‘தியாக மறத்திகள்’தான் சுயமரியாதை – திராவிடர் கழகத்தின் இரத்த ஒட்டம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
30.6.2025