கொள்கை மாறாத கொட்டாரக்குடி இலட்சுமி மறைவு நமது வீர வணக்கம்

1 Min Read

நாகை மாவட்டம், கொட்டாரக்குடியில் நமது கழகச் செயல் வீரராக பல ஆண்டுகள் தொண்டாற்றிய தோழர் குருசாமி என்ற திராவிட விவசாயத் தொழிலாளர் கொள்கை எதிரிகளால் கொலை செய்யப்பட்டார்.

அதைக் கண்டித்து கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு நடைபெற்ற வழக்கு நிறைவில் எதிரிகள் தண்டிக்கப்பட்டனர்.

அவரது வாழ்விணையர் கொட்டாரக்குடி இலட்சுமி முதுமை காரணமாக நேற்று (29.6.2025) மறைவுற்றார் என்பதை அறிய மிகவும் துயரம் அடைகிறோம்.
துணைவரை இழந்த இலட்சுமி அம்மையாருக்கு நாம் நேரில் ஆறுதல் கூறி – அவரது வாழ்வாதாரத்திற்கு 200 குழி நிலமும் இயக்கம் வாங்கித் தந்தது. அவரும் தொடர்ந்து இயக்க கொள்கை வீர நாயகியாகத் தொடர்ந்தார். ‘தான் இறந்தால் கழக முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும்’ என்று அவர் கூறியதாக அவரைப் பேட்டி கண்ட தோழர் வி.சி.வில்வம் பதிவு செய்துள்ளார்.

கழகப் பொறுப்பாளர்கள் அவரது இறுதி நிகழ்வை கொள்கை பூர்வமாக நடத்திடத் திரண்டனர்.
அப்படிப்பட்ட ‘தியாக மறத்திகள்’தான் சுயமரியாதை – திராவிடர் கழகத்தின் இரத்த ஒட்டம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.

தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
30.6.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *