புதுடில்லி, ஜூன்.30– நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பூரி கோவில் நெரிசல் சம்பவம் குறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
பூரி ரத யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசல் கவலை அளிக் கிறது. பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.
நிவாரண பணிகளை விரைவு படுத்துமாறு ஒடிசா அரசைக் கேட்டுக்கொள்கிறேன். காங்கிரசாரும் உதவ வேண்டும்.துயர சம்பவம் என்பது தீவிர எச்சரிக்கை. இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும், கூட்டத்தை ஒழுங் குபடுத்துவதும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண் டும். மனித உயிர்களை பாதுகாப்பது மிக முக்கியமான பணி. இந்த பொறுப்பில் நிகழ்ந்த குறைபாடு ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.