பிஜேபி ஆளும் அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு

1 Min Read

சண்டிகர், நவ. 12 – அரியானாவில் கள் ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள் ளது.  அரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட் களில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள னர். அவர்களின் இறப்புக்கு கள்ளச்சாராயம்தான் காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடை பெறுகிறது.  

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவரிடம், விவரத் தைக் கேட்டு அறிந்தோம். கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக சிலரை கைது செய்து விசாரித்து வருகிறோம். 

கள்ளச்சாராயம் தொடர்பாக பல இடங்களில் சோதனை செய்து, முக்கியமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இறந்தவர்களின் வீடுகளில் காலி யான மது பாட்டில்கள் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளன  என தெரிவித்தார்.  

இதற்கிடையில் அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து பலியா னோர் எண்ணிக்கை 19 ஆக அதி கரித்துள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், கள்ளச்சாராயம் விற்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர்.  கள்ளச்சாராய விற் பனை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

இவர்கள் 7 பேரும் கள்ளச் சாராயம் விற்பனை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றில் வைத்து தயாரிக்கப்பட்ட 200 கள்ளச் சாராய பெட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய் துள்ளனர்.  

மேலும் 14 காலி டிரம்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயா ரிக்க பயன்படுத்திய பொருட்க ளையும் காவல்துறையினர் பறி முதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *