நமது செல்வத்தை அந்நிய நாட்டார் கொள்ளையடிப்பதாகச் சொல்லுவது சுத்தப்புரட்டு,
நமது செல்வத்தைக் கொள்ளையடித்து நம்மைப்பட்டினி போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர் வட்டிக்கடைக்காரர் ஆகியவர்களுமேயாவார்கள். அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம்முடையதல்ல. நம்மைக் கொள்ளை அடித்து பட்டினிபோடும் பாதகர்களாகிய மேற்கண்ட முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், வட்டிக்கடைக்காரன் முதலியவர்கள் செல்வமேயாகும். ஆகையால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
மேலே சொல்லப்பட்ட இந்தக்கூட்டங்களை ஒழித்தால் தான் நமது செல்வம் நமக்குக்கிடைக்கும். அப்போது நாம் வயிறார உண்ணலாம். கஷ்டப்படும் நாடுகளுக்குத் தருமமும் செய்யலாம்.
இப்படிக்கு
100க்கு 90 மக்களாகிய, தொழிலாளிகள் ,வேலையாளர்கள், கூலியாட்கள், பண்ணையாட்கள்.
‘குடிஅரசு’ – பெட்டிச் செய்தி – 25.10.1931