ஊர் பெயர்களை மாற்றும் பிஜேபி அரசு பின்னணியில் இருப்பது பண்பாட்டு படையெடுப்பே!

2 Min Read

புதுடில்லி, ஜூன் 29 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்றது. அதன் பிறகு பல முக்கிய ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் புதுவரவாக இணையவிருப்பது உத்தரப் பிரதேசத்திலுள்ள ‘சிந்தூர்புரம்’

ஆக்ரா ஜில்லா பஞ்சாயத்து தலைவர் மஞ்சு பதோரியா அரசுக்கு சமர்ப்பித்துள்ள முன்மொழிவில் ஃபதேஹாபாத் மற்றும் பாட்ஷாஹி பாக் ஆகிய ஊர்களின் பெயர்களை மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் ஃபதேஹாபாத் சிந்தூர்புரம் என்றும், பாட்ஷாஹி பாக் பிரம்மபுரம் என்றும் மாற்றப்பட உள்ளது.

lகடந்த 2019-ஆம் ஆண்டு அலா காபாத் – பிரயாக்ராஜ் எனப் பெயர் மற்றப்பட்டது. அதே ஆண்டில் ஃபைசா பாத் மாவட்டத்தின் பெயர் அயோத்யா என மாற்றப்பட்டது.

l முகல்சாராய் சந்திப்பு கடந்த 2018-இல் தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு என மாற்றப்பட்டது.

l டில்லியிலுள்ள ராஜ்பாத் – கார் தவ்ய பாத் என்று கடந்த 2022-இல் மாற்றப்பட்டது.

l ஹரியானாவிலுள்ள முக்கிய நகரான குர்கான் கடந்த 2016-இல் குருகிராம் என மாற்றப்பட்டது.

l மத்திய பிரதேசத்திலுள்ள ஹோஷங் காபாத் கடந்த 2022-இல் நர்மதாபுரம் எனவும், அதனருகே அமைந்துள்ள பாபாய் நகர் – மாகான் நகர் எனவும் மாற்றப்பட்டன.

lஅந்தமான் நிகோபார் தீவுகளி லுள்ள ராஸ் தீவுகள் கடந்த 2018-இல் பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் த்வீப் எனவும், நீல் தீவு, ஹேவ்லாக் தீவு ஆகிய இரு இடங்களும் முறையே ஷாஹீத் த்வீப், ஸ்வராஜ் த்வீப் எனவும் மாற்றப்பட்டன.

இந்த ஆண்டுக்குள் உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரித்வார், டேராடூன், நைனிடால், உதம் சிங் நகர் மாவட் டங்களில் மொத்தம் 11 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அம் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கடந்த திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

அதில் கவனிக்கத்தக்கது என்ன வெனில், ஹிந்து கடவுள்கள், சாதுக் கள் மற்றும் புராதனக் கதையின் கதாபாத்திரங்களின் பெயர்களே சூட்டப்படும் என்றிருப்பதும்,பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர்களும் சூட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *