செய்திச் சுருக்கம்

1 Min Read

பா.ஜ.க., ஆர்.எஸ்.எசுக்கு மனுஸ்மிருதி மட்டுமே தேவை

பாஜக, RSS-க்கு அரசமைப்பு தேவையில்லை என்றும் ‘மனுஸ்மிருதி’ மட்டுமே தேவை எனவும் ராகுல் காந்தி சாடியுள்ளார். அரசமைப்பில் உள்ள சமத்துவம், மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு எரிச்சலூட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற ஆகிய வார்த்தைகளை அரசமைப்பில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என RSS அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமர்நாத் யாத்திரை…
ஆர்வம் காட்டாத பக்தர்கள்!

பஹல்காம் தாக்குதல் சம்பவம் காரணமாக இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு யாத்திரைக்கு 10% பக்தர்கள் குறைவாக பதிவு செய்திருப்பதாக ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார். இதற்கு பஹல்காம் தாக்குதல் அச்சமும் ஒரு காரணம் என அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *