டாக்கா, ஜூன் 29- “வங்க தேசத்தின் மேனாள் தேர்தல் ஆணையர் ஷேக் ஹசீனா வெற்றி பெற வைப்பதற்காக தேர்தலில் முறைகேடு செய்தது கண்டறியப் பட்டதால் அவர் வங்கதேச காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஷேக் ஹசீனா ஜூன் 1996 முதல் ஜூலை 2001 வரையிலும், மீண்டும் ஜனவரி 2009 முதல் ஆகஸ்ட் 2024 வரையிலும் பங்களாதேஷின் பத்தாவது பிரதமராகப் பணியாற்றினார் வங்கதேசத்தின் வரலாற்றிலேயே அதிக ஆண்டு பிரதமராக இருந்தவர். இவரது பதவிக் காலத்தில் அந்த நாட்டில் பெரும் மோசடிகள் நடந்தன. கேள்வி எழுப்பியவர்கள் சிறை வைக்கப்பட்டனர். எதிர்கட்சி என்ற ஒன்றை இல்லாமலேயே ஆக்கிவிட்டார்.
எதிர்கட்சியில் ஊழல் செய்த நபர்களை தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டு அவர்களின் ஊழலை மறைக்க உதவியாக இருந்தார்.
கிட்டத்தட்ட மகாராணியைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்த இவருக்கு எதிரான 2024ஆம் ஆண்டு ஜூலை பல்கலைக்கழக மாணவர்கள் வெகுண்டெழுந்தனர். அது மக்கள் புரட்சியாக மாறவே ஷேக் ஹசீனா வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து தப்பி இந்தியாவிற்கு ஓடிவந்துவிட்டார். இப்போது இந்திய அரசின் பாதுகாப்பில் உள்ளதாகவும், அவரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் வங்கதேச நிர்வாகக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், வங்க தேச தேர்தலின் போது பெருமளவு தேர்தல் முறைகேடு செய்து ஷேக் ஹசீனாவை தொடர்ந்து வெற்றிபெறச்செய்த மேனாள் வங்க தேச தலைமைத்தேர்தல் ஆணையர் நூருள் ஹுட்டா நீண்ட விசாரணைக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் தேர்தலின்போது முடிவுகளை கையாண்டது, வாக்காளர் பட்டியலை திருத்தியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒப்புகொண்டுள்ளார்.
கடந்த வாரம் மற்றோரு தலைமைத்தேர்தல் ஆணையர் கஷி ஹபிபுல் அவ்வள் மேகாலயா எல்லை வழியாக இந்தியாவிற்கு தப்ப முயன்றபோது மோஹ்பஜார் என்ற பகுதியில் கைதானார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் படி நூருள் ஹுட்டாவும் கைதுசெய்யப்பட்டார்.