நோபல் பரிசு உறுதியாக கிடைக்கும் டிரம்பாரே!!
இந்தியா – பாகிஸ்தானிடையே பஹல்காம் என்ற சுற்றுலாத்தலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்,. அதன் பிறகான மோதல்; இவற்றை விபாயார கிலுகிலுப்பை காட்டி நிறுத்தி விட்டேன் என்று 21 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் கூறிவருகிறார்.
கால்வாசி இஸ்ரேல் அழிந்துவிட்டது, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக் காவின் முக்கிய ராணுவ தளங்கள் ஈரானின் தாக்குதலுக்கு இலக்காயின. பிறகு வெள்ளைக் கொடி காட்டி இஸ்ரேலையும் சத்தமில்லாமல் நாங்கள் போரை நிறுத்துகிறோம் என்று கூறிச் செய்து விட்டார். இந்த நிலையில், மேற்கொண்டு இஸ்ரேல் ஒரு தாக்குதல் நட்த்தினாலும் ஒட்டுமொத்த இஸ்ரேலையும் காலி செய்து விடுவோம் என்று ஈரான் எச்சரித்துவிட்டது.
ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இரண்டு நாடுகளிலும் அமெரிக்க அதிபர் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கூறுகிறார். அவ்வப்போது மிரட்டுகிறார். இருப்பினும் இரண்டு நாடுகளுமே எங்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஆன பிரச்சினையில் வேடிக்கை மட்டும் பாருங்கள் என்று கூறிவிட்டது. இந்த நிலையில் டிரம்ப் ‘‘நான் தான் இந்தியா – பாகிஸ்தான் போர், ஈரான் – இஸ்ரேல் போர், சிரியா உள்நாட்டுக் கலவரம் போன்றவற்றை நிறுத்திவிட்டேன் ஆகவே எனக்கு நோபல் பரிசு கொடுங்கள்’’ என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஆனால், டிரம்ப்தான் போரை நிறுத்தினார் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் கிடையாது.
டிரம்ப் அவர்களுக்கு ஒரு கோரிக்கை, 250 ஆண்டுகாலமாக நடந்துவரும் வடகலை – தென்கலைப் பிரச்சினையை தீர்த்துவைத்தால் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று ‘‘கருப்புச்சட்டை” பரிந்துரை செய்கிறது.