சென்னை, ஜூன் 27 அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாடு மாணவர்கள் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல் வன்’ சிறப்பு திட்ட இயக்குநர் (போட்டித் தேர் வுகள் பிரிவு) நேற்று (26.6.2025) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு வாயிலாக ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் தமிழ்நாடு மாணவர்கள் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் இதற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வு ஜூலை 26ஆம் கூறி தேதி நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மய்யங்களில் சேர விரும்பும் ஆர்வமுள்ள தமிழ்நாடு மாணவர்கள் www. naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மதிப்பீட்டுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஜூலை 3-ஆவது வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு ஜூலை 26-ஆம் தேதி காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது