சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள் மாதம் ரூ.7500 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஜூன் 27 அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாடு மாணவர்கள் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல் வன்’ சிறப்பு திட்ட இயக்குநர் (போட்டித் தேர் வுகள் பிரிவு) நேற்று (26.6.2025) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு வாயிலாக ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் தமிழ்நாடு மாணவர்கள் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் இதற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வு ஜூலை 26ஆம் கூறி தேதி நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மய்யங்களில் சேர விரும்பும் ஆர்வமுள்ள தமிழ்நாடு மாணவர்கள் www. naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மதிப்பீட்டுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஜூலை 3-ஆவது வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு ஜூலை 26-ஆம் தேதி காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *