இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை? காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 Min Read

புதுடில்லி, ஜூன் 26– கடந்த 11 ஆண்டு களாக இந்திய ஜனநாயகத்தின் மீது அய்ந்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நிகழ்ந்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் மாநிலங்களைக் கைப்பற்றி சட்டம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ஊடகம் என அனைத்தும் ஒரு தனிப்பட்ட அமைப்பின் கட்டுப்பாட்டில் சென்று விட்டதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி யுள்ளார்.

பெரும்பாலான ஊடகங்கள் தெளி வாக, அரசு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், மக்கள் உண்மையை அறிய முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அமைப்புசார் நிதி வளங்கள், சில குறிப்பிட்ட சக்திகளுக்கு மட்டுமே சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உஃபா, பிஎம்எல்ஏ போன்ற கடுமையான சட்டங்கள், பொதுமக்கள், எதிர்க்கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.  கல்வி, பண்பாடு, வரலாறு இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பகுத்தறிவை அழிக்க முயற்சி நடப்பதாகவும், இந்திய ஜனநாயகம் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இது அறி விக்கப்படாத அவசரநிலை என்றும் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *