கருநாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு காவிரியில் வெள்ளப்பெருக்கு

1 Min Read

பெங்களூரு, ஜூன்.26 கருநாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருவதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதையடுத்து நேற்று (25.6.2025) கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினா டிக்கு 36 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும் உபரிநீர் திறக்கப்பட்டது. திருமகூடலு சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து தமிழ்நாடு நோக்கி காவிரியில் பாய்ந்தோடி வருகிறது. அதன்படி நேற்றைய நிலவரப் படி வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி நீர் நோக்கி வருகிறது. இதனால் நஞ்சன்கூடு, டி.நரசிப்புரா, கொள்ளேகால் பகுதிகளி லும் காவிரி கரையோர கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக சிறீரங்கப்பட்டணா, ஹலகூர் ஆகிய பகுதிகளில் சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *