பிஜேபி அரசின் ஓரவஞ்சனை நடப்பு ஆண்டிலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான நிதி ரூ.1,800 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை அமைச்சர் அன்பில் மகேஸ் பகிரங்க குற்றச்சாட்டு

2 Min Read

சென்னை, ஜூலை 26 தமிழ்நாட்டுக்கு நடப்பு (2025-2026) கல்வியாண்டிலும் அனைவருக் கும் கல்வித் திட்டத்துக்கான நிதி ரூ.1,800 கோடியை வழங்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து 2-ஆவது நாளாக சென்னை டிபிஅய் வளாகத்தில்  24.6.2025 அன்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையிலான இக்கூட் டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, அ நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் சங்கர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் துறைசார் இயக்குநர்கள் பங்கேற்றனர். அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர் களிடம் பேசியதாவது:

ஒவ்வொரு மாவட்டமாக தனித் தனியாக ஆலோசனை நடத்தப் பட்டது. புகார் எண்ணுக்கு வந்த புகார்கள், அதில் தீர்வு காணப்பட்டவை, துறைசார்ந்த நிலுவையில் உள்ள கோப்புகள், 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினோம். கல்வி அலுவலர்கள் ஆய்வுகளை அதிகம் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

மாணவர்கள் பிரச்சினை

பள்ளிகளில் ஜாதி ரீதியான பிரச்சினைகள் மற்றும் பாலியல் சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. மேலும், இடைநிலை ஆசிரியர்கள் 2,346 பேர் பணி நியமனம் அடுத்த மாதம் நிறைவடையும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மேம்படுத்தவும். விவாதித்தோம். சில பகுதிகளில் 5 வயதை கடந்த குழந்தைகள் இல்லாத சூழல்களும் உள்ளன. அதையும் ஆராய்ந்து வருகிறோம். தனியார் பள்ளிகளில்கூட பல்வேறு இடங்களில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது.

பாரபட்சம்

குறைந்த நபர்கள் பேசக்கூடிய சம்ஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளனர். 8 கோடி மக்கள் இருக்கும் தமிழுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவது பாரபட்சமாகும். தமிழ்நாட்டுக்கு 2025-2026-ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு ரூ.1,800 கோடி நிதி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இதுவரை நிதி நிலுவையில் உள்ளது. அவர்கள் தேசிய கல்விக் கொள்கைக்கு கையெழுத்து போட்டால்தான் நிதி தருவோம் என கூறுகின்றனர்.

இதுதொடர்பாக தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துவோம், நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *