சென்னை, ஜூன் 25 சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 95 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.6.2025) காலை 10 மணியளவில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொரு ளாளர் வீ. குமரேசன், மாநில வழக்குரைஞர் அணித் தலைவர் த. வீரசேகரன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநிலகல்லூரி முதல்வர் இராமன், தமிழ்த் துறைப் பேராசிரியர் இரகு மற்றும் கழக விளையாட்டு மாநில அமைப்பாளர் பூவரசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேசு, மாநில மாணவர் கழக துணை செயலாளர் செ.பெ. தொண்டறம், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, இளைஞரணி துணைச் செயலாளர் அன்பு, மகளிர் பாசறை தலைவர் பவானி, சைதை தென்றல், பகுத்தறிவாளர் கழக தலைவர் மாணிக்கம், அரும்பாக்கம் சா. தாமோதரன், மயிலை பாபு, கே.என். மகேஸ்வரன், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் ந. இராசேந்திரன், பொதுக் குழு உறுப்பினர் தங்க. தனலட்சுமி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை அ. அன்புச்செல்வன், துணைத் தலைவர் நா. பார்த்திபன், இளைஞரணி துணைச் செயலாளர் த. பரிதின், மாணவர் கழக தலைவர் சஞ்சய், ஜீவா, கோ. தங்கமணி, பெரியார் மாணாக்கன், க. கலைமணி, அருள், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, பொதுக் குழு உறுப்பினர் பி.சி. ஜெயராமன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.