கரோனா பாதிப்பு

1 Min Read

 புதுடில்லி, ஜூன் 20 – இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 100-அய் தாண்டுவதும், இறங்கு வதுமாக இருக்கிறது. நேற்று முன்தினம் 90 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 63 பேருக்கு மட்டும் பாதிப்பு உறுதியானது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 543 ஆக அதிகரித்தது.

கரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில், 77 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 

44 லட்சத்து 59 ஆயிரத்து 737 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 15 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,910 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்தனர்.

கரோனாவுக்கு நேற்று முன்தினம் பலி எண்ணிக்கை 2 ஆக காட்டப்பட்டது. நேற்று ஒருவர் மட்டும் உயிரி ழந்தார். மொத்த உயிரிழப்புகள் 5 லட்சத்து 31 ஆயிரத்து 896 ஆக அதிகரித்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *