கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 24.6.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை  சேர்ந்த தாய் மட்டும் வளா்க்கும் குழந்தைக்கு ஓபிசி சான்றிதழ் வழங்குவதற்கு விதிமுறைகளில் திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு முக்கியமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நான்கு மாநிலங்களில் நடைபெற்ற அய்ந்து இடைத் தேர்தல்களில், குஜராத்தில் பாஜக ஒரு தொகுதியில் தோல்வி. ஒரு தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி, கேரளாவில் காங்கிரஸ் வெற்றி. மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி வெற்றி.

தி இந்து:

* நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கால்நடை கடத்தல் குற்றச்சாட்டில் இரண்டு தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் முழங்காலில் நடக்கவும், புல் சாப்பிடவும், அழுக்கு நீரை குடிக்கவும் கட்டாயப் படுத்தப்பட்டனர், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தல்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *