செய்திச் சுருக்கம்

Viduthalai
1 Min Read

வேலைவாய்ப்பு

சென்னையில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யங்களும் இணைந்து 23.6.2023 அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் காலை 10 மணி முதல் மதியம்  2 மணி வரை முகாம் நடைபெறும்.

அவகாசம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா தகவல்.

அதிகரிப்பு

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையை ஏற்று காலி பணியிடங்களின் எண்ணிக்கையை தற் போது வரை 10,748 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்துள் ளது. அதே நேரத்தில் இன்னும் இந்தப் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பயிற்சி வகுப்பு

சென்னை தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும்  தொழில் நெறி வழிகாட்டும் மய்யத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் சிவில் நீதிபதி தேர்விற்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

மீட்பு படை

தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 500 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தகவல்.

உயர்வு

கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழை காரண மாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு கூடியிருப்பதாக நீர் வளத் துறை அதிகாரிகள் தகவல்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *