க. கலைமணி – பாக்யா ஆகியோரின் புதிய இல்லத்திற்கு சென்று தமிழர் தலைவர் வாழ்த்து!

1 Min Read

அரசியல்

கழகத் தோழர் க. கலைமணி – பாக்யா ஆகியோரின் புதிய இல்லமான – “முடப்பள்ளி கோ. கருணாநிதி – குணசுந்தரி  இல்ல” அறிமுக விழாவில் (30.4.2023)  கழகத்  தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து  கொள்ள இயலாத காரணத்தால் 18.6.2023 அன்று முடப்பள்ளிக்குச் சென்று இல்லத்தினைப் பார்வையிட்டு அங்கு கூடியிருந்த மக்களிடையே வாழ்வியல்  உரையாற்றினார். புதிய இல்லத்திற்கு இயக்க நூல்களை குடும்பத்தினரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர்  முனைவர் துரை. சந்திரசேகரன், திண்டிவனம் இளம்பரிதி,  தம்பி  பிரபாகரன், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன  மேனாள்   மாணவர்களான ஆசிரியர்கள் தட்சிணாமூர்த்தி, அன்பழகன், ஞானவேல், சிவனேசன் மற்றும் குடும்பத்தினர்.

அரசியல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *