பட்டாசு கொளுத்தித் தீபாவளி கொண்டாடுவதால் ஏற்படும் உயிரிழப்பும் பொருளிழப்பும்!

2 Min Read

தென்கிழக்காசியப் பசுமைஅமைதி (கிரீன் பீஸ் ) அமைப்பு ஆய்வு செய்து, காற்றுமாசு காரணமாக  2020ஆம் ஆண்டில் ஆறு மாநகரங்களில் எடுத்த புள்ளிவிவரப்படி இறந்த மக்கள் எண் ணிக்கையும், பொருளாதார இழப்பும் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது:

டில்லி

உயிரிழந்த மக்கள் 54,000.

பொருளாதார இழப்பு ரூ.58,895 கோடி

மும்பை

உயிரிழந்த மக்கள் 25,000.

பொருளாதார இழப்பு ரூ.26,912 கோடி

பெங்களூரு

உயிரிழந்த மக்கள் 12,000.

பொருளாதார இழப்பு ரூ.12,365 கோடி

அய்தராபாத்

உயிரிழந்த மக்கள் 11,000.

பொருளாதார இழப்பு ரூ.11,617கோடி

சென்னை

உயிரிழந்த மக்கள் 11,000.

பொருளாதார இழப்பு ரூ.10,910 கோடி

இலக்னோ

உயிரிழந்த மக்கள் 6,700.

பொருளாதார இழப்பு ரூ.8,000 கோடி

வழக்கம் என்பதில் 

    ஒழுக்கம் இல்லையேல் 

கழுத்துப் போயினும் 

     கைக்கொள்ள வேண்டாம்.

                                                                     – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

செவியைக்கிழிக்கும் ஓசை மிகுதி யால் ஏற்படும் நெஞ்சாங்குலை அதிர்ச்சி ஒருபுறம்!

‘கந்தக டைஆக்சைடு ‘ எனும் நச்சுப் புகை ஏற்படுத்தும் நுரையீரல் சுவாசப் பாதிப்பு ஒருபுறம்!

இவற்றால் பறிபோகும் உயிர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கூடிய படி உள்ளது.

வீட்டுக்கு முன்பும் வீதிநடுவிலும் பட்டாசு வெடிக்கும் கொடூரம் உலகின் எந்தநாட்டிலும் இல்லாத கொடுமை!

ஊருக்கு ஒதுக்கமாய் அரசு ஒதுக் கித்தரும் இடத்தில், நேரக்கட்டுப்பாட் டோடு பட்டாசு வெடிக்கும் ஒழுங்கும் நாகரிகமுமே உலகம் முழுதும் உண்டு.

அந்த நாகரிகவாழ்வை நாம் பெறா விட்டால், மனிதர் வாழத் தகுதியற்ற ஊர்களை நாமே உருவாக்கி விடுவோம்.

உயிர்இழப்பையும் காசைக் கரியாக் கும் பண இழப்பையும் ஏற்படுத்துவது பட்டாசு!

பட்டாசு வெடிப்பதைக் கட்டுப்படுத் துவோம். மனிதர்கள் நலத்தோடு வாழும் நாகரிக சமுதாயம் உருவாக உறுதியேற் போம்.

  – சூலூர் பாவேந்தர் பேரவை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *