இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

பெரப்பேரி, ஜூன் 21- இராணிப் பேட்டை மாவட்ட கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டம் 16.6.2025 அன்று பெரப்பேரி பிரேமா சங்கரின் இல்லத்தில் நடைபெற்றது

இந்த நிகழ்வுக்கு மகளிரணியைச் சேர்ந்த பிரேமா தலைமை ஏற்றார். சங்கீதா வரவேற்புரை ஆற்றினார். லோ.செல்வி வேண்டா, மணியம்மை இளமதி  மற்றும் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில மகளிரணி துணைச் செயலர் ந.தேன்மொழி, மகளிரணி மற்றும் பாசறை தோழர்களின் பொறுப்பு குறித்தும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் கருத்துரை வழங்கினார்.

மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் பெரியார் பிஞ்சு சந்தா வளர்ச்சி குறித்தும் ஆசிரியர் வழிகாட்டுதல்படி மகளிர் தோழர்கள் சிறப்பாக எவ்வாறு செயல்படுவது என்று சிறப்புரை ஆற்றினார்கள்.

தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லப்பன், மாவட்ட தலைவர் லோகநாதன், மேனாள் துணைச்செயலர் தீனதயாளன், மாவட்ட துணைச்செயலர் பெரியார் நேசன், இளைஞரணித்தலைவர் சங்கர், நெமிலி ஒன்றியத்தலைவர் சங்கர், பக இளந்திரையன், நெமிலி ஒன்றியச்செயலர் கன்னியப்பன், பக மாநில அமைப்பாளர் அன்பரசன், பக மாவட்ட செயலர் வே.மா.முனைவர் வே.வினாயக மூர்த்தி, குடியாத்தம் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *