பெரப்பேரி, ஜூன் 21- இராணிப் பேட்டை மாவட்ட கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டம் 16.6.2025 அன்று பெரப்பேரி பிரேமா சங்கரின் இல்லத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்வுக்கு மகளிரணியைச் சேர்ந்த பிரேமா தலைமை ஏற்றார். சங்கீதா வரவேற்புரை ஆற்றினார். லோ.செல்வி வேண்டா, மணியம்மை இளமதி மற்றும் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மகளிரணி துணைச் செயலர் ந.தேன்மொழி, மகளிரணி மற்றும் பாசறை தோழர்களின் பொறுப்பு குறித்தும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் கருத்துரை வழங்கினார்.
மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் பெரியார் பிஞ்சு சந்தா வளர்ச்சி குறித்தும் ஆசிரியர் வழிகாட்டுதல்படி மகளிர் தோழர்கள் சிறப்பாக எவ்வாறு செயல்படுவது என்று சிறப்புரை ஆற்றினார்கள்.
தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லப்பன், மாவட்ட தலைவர் லோகநாதன், மேனாள் துணைச்செயலர் தீனதயாளன், மாவட்ட துணைச்செயலர் பெரியார் நேசன், இளைஞரணித்தலைவர் சங்கர், நெமிலி ஒன்றியத்தலைவர் சங்கர், பக இளந்திரையன், நெமிலி ஒன்றியச்செயலர் கன்னியப்பன், பக மாநில அமைப்பாளர் அன்பரசன், பக மாவட்ட செயலர் வே.மா.முனைவர் வே.வினாயக மூர்த்தி, குடியாத்தம் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.