தமிழ்நாடு ஆளுநரே, பஞ்சாப்பை பாருங்கள்! பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் முதலமைச்சர்தான் வேந்தர்: மசோதா நிறைவேற்றம்

1 Min Read

சண்டிகார்,ஜூன் 21- பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. 

இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையின் 2 நாள் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (20.6.2023) தொடங்கியது. அதில், பஞ்சாப் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பொறுப்பில் ஆளுநருக்கு பதிலாக முதலமைச் சரை நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப் பட்டது. நேற்று அந்த மசோதா மீது சிறிது நேரம் விவாதம் நடந்தது. பின்னர், வாக்கெடுப் பில் அது நிறைவேற்றப்பட்டது. ஆளும் ஆம் ஆத்மி மட்டுமின்றி, அகாலிதளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் அதை ஆதரித்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *