தமிழ்நாடு ஆளுநரே, பஞ்சாப்பை பாருங்கள்! பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் முதலமைச்சர்தான் வேந்தர்: மசோதா நிறைவேற்றம்

Viduthalai
1 Min Read

சண்டிகார்,ஜூன் 21- பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. 

இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையின் 2 நாள் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (20.6.2023) தொடங்கியது. அதில், பஞ்சாப் அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பொறுப்பில் ஆளுநருக்கு பதிலாக முதலமைச் சரை நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப் பட்டது. நேற்று அந்த மசோதா மீது சிறிது நேரம் விவாதம் நடந்தது. பின்னர், வாக்கெடுப் பில் அது நிறைவேற்றப்பட்டது. ஆளும் ஆம் ஆத்மி மட்டுமின்றி, அகாலிதளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் அதை ஆதரித்தன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *