ஆய்வாளர் சுவாதி நாராயணன் படைத்த நூலை எடுத்துக்காட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

viduthalai
7 Min Read

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், சிறீலங்காவுடன் ஒப்பிடுகையில், இந்தியா பின்தங்கியுள்ளது!
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா ‘சூப்பர் மாடலாக‘ ஒளிர்கிறது!
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடக் கோட்பாடுகளால் ‘திராவிட மாடல்’ அரசு சாதனைகளால் சிறந்தோங்கி நிற்கிறது!

இந்தியாவில், தமிழ்நாடு ,கேரளா ஆகிய மாநிலங்கள் சிறந்தோங்கி வளர்ந்துள்ளன. அதிலும், குறிப்பாக தமிழ்நாடு மேலோங்கி நிற்பதற்குக் காரணம், தந்தை பெரியார், அவர் கண்ட சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கத்தின் தாக்கமும்தான் என்பதை ஆய்வாளர் சுவாதி நாராயணன் ஆய்வு நூலை எடுத்துக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆசிரியர் அறிக்கை

உழவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடியினரை மய்யமாகக் கொண்டு, சம காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவும் சமூக, பொருளாதார சமத்துவ மின்மையின் இயல்பையும் காரணங்களையும் குறித்து  சுவாதி நாராயணன் என்ற சிறந்த ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வு 2023 ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்துள்ளது. அந்நூலின் ஆய்வு முடிவுகள் தமிழ்நாட்டின் தனிப்பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.

மிகவும் பின்தங்கிய இந்தியா!

இந்தியாவையும், இந்தியாவின் அண்டை நாடு களான நேபாளம், பங்களாதேஷ், சிறீலங்கா ஆகிய மூன்று நாடுகளையும் ஆய்வு செய்து, அந்நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், விடுதலை இந்தியா பல வகைகளில் எப்படி பின்தங்கிய நாடாக இருக்கிறது என்பதற்குப் பல புள்ளிவிவரங்கள் இந்நூலில் உள்ளன!

இந்தியாவில், குறிப்பாக, வட நாட்டில் பல மாநிலங்கள் கல்வி, மருத்துவம் போன்றவற்றில் மிகவும் பின்தங்கியுள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஆனால், தமிழ்நாடும், கேரளாவும் மருத்துவம், கல்வி முதலானவற்றில் பாய்ச்சலில் உள்ளன!

இரண்டு மாநிலங்களும் மிகவும் பாராட்டத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளன.

எனவே, இந்த இரு மாநிலங்களையும் ‘‘சதர்ன் சூப்பர் மாடல்ஸ்’’  (‘‘Southern Supermodels’’)  என்று அந்த ஆய்வு பாராட்டியுள்ளது.

மற்ற மூன்று நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், சிறீலங்கா பற்றி அந்நூலாசிரியர் கள ஆய்வு நடத்தி, சாதாரண விவசாயிகள், கைவினைஞர்கள், தலித்துகள், பழங்குடிமக்கள் மற்றும் பொதுவாக வங்காளதேசம், நேபாளம் மற்றும் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பு கொண்டு ஆய்வு செய்துள்ளார்.

மிகவும் பின்தங்கியுள்ள பீகார்!

வங்காளதேசம் மற்றும் நேபாளத்தைவிட, பீகார் மனித வளர்ச்சியின் அடிப்படை குறியீடுகளில் மிகவும் பின்தங்கியுள்ளது.

இதுகுறித்து ‘Economic and Political Weekly’ ஏட்டில் புலன் பி.நாயக் எழுதிய புத்தக மதிப்புரையில்,

‘‘The situation in southern India generally, and in Kerala and Tamil Nadu in particular, is quite different. The author describes these states as the ‘‘Southern Supermodel’’  என்று தெரிவித்துள்ளார்.

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘பொதுவாக தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் நிலைமை மிகவும் வித்தியாசமானது என்று இந்நூலாசிரியர் இந்த மாநிலங்களை தெற்கத்திய சூப்பர்மாடல்’’ என்று பாராட்டியுள்ளார். பல புள்ளி விவரங்களை முக்கியக் காரணங்களாக அடுக்கி உள்ளார்.

இப்படி இந்தியாவின் பல சமூக வளர்ச்சியில் மிகவும் சமத்துவமின்மை நிலவுவதற்கான அடிப்படைக் காரணம் என்று அறிவியல் அணுகுமுறை இன்மையே என்று ஆணியடித்துள்ளார்!

சமத்துவமின்மைக்கான
இரு காரணங்கள்!

சமத்துவமற்ற நிலைக்கு அடிப்படைக் காரணம் இரண்டு.

ஒன்று வறுமை, மற்றொன்று ஜாதி.

தந்தை பெரியார், சமத்துவ, ஜாதி ஒழிப்பு இயக்கமாக 1925 இல் தமிழ்நாட்டில், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதன் விளைவாக, சமூக ஒருங்கிணைப்பு சிறப்பாக வந்தது.

அதை அடிக்கட்டுமானமாகக் கொண்டு, நல்ல ‘திராவிட மாடல்’ உருவாகியிருப்பதைச்  சுட்டிக்காட்டி யிருக்கிறது இந்த ஆய்வு!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டில், சமூக விஞ்ஞானத்தை எப்படி தந்தை பெரியாரும், அவரது திராவிட இயக்கமும், சுயமரியாதைக் கொள்கையை லட்சியமாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைத்த அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன்று மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது சிறந்த கொள்கை – சாதனைகள் எப்படி ஒப்பீட்டிலும் உயர்ந்தோங்கி உள்ளன என்ற தகவல்களை ஆய்வாளர் வெளியிட்டு, திராவிட மாடல் ஆட்சியின் புகழ் வளர்ந்தோங்கி யுள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார்!

திராவிடக் கோட்பாடுகளின்
வேகம்!

‘‘Dravidian activism was truly ignited when Periyar launched the radical Suyamariathai Iyakkam (Self-Respect Movement) in 1925.  Initially, this social movement only promoted inter-caste dining and inter-caste marriage.  Over time, the movement’s goals became more radical, seeking to abolish caste and religion entirely.  For at least three decades, this ‘cultural project of emboldening people’ systematically diluted caste hegemony in Tamil society, polity, economy and even in the spoken word. In 1938, the anti-Hindi agitations opposed Hindi for being an alien language, also pointing to its affinity to Sanskrit and Brahminism. This language rebellion united the Justice Party and the Self-Respecters towards building the Dravidar Kazhagam, led by Periyar, as a mass organisation.’’

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘திராவிடக் செயல்பாடுகளின் வேகம் உண்மை யிலேயே அதிகரித்தது 1925 இல் தந்தை பெரியார் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரில் ஒரு முற்போக்குச் சிந்தனை அமைப்பை உருவாக்கியபோது தான்! துவக்க நிலையில் இந்தச் சமூக இயக்கம், ஜாதி பேதமற்ற சமபந்தி உணவு முறையையும், கலப்புத் திருமணங்களையும் மட்டுமே வலியுறுத்தும் இயக்கமாக இருந்தது. காலப்போக்கில் இந்த இயக்கத்தின் நோக்கங்கள் மேலும் புரட்சிகரமானவையாக, பல சீர்திருத்தங்களுக்கு வழிவகுப்பவையாக வளர்ந்தன. ஜாதி அமைப்பையும், மதங்களையும் அடியோடு அழிப்பது முக்கிய லட்சியமாயிற்று.

மக்களைத் துணிவுமிக்கவர்களாக மாற்ற முனையும் ஒரு பண்பாட்டுப் போராகவே இந்த இயக்கம் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. தமிழ்ச் சமூகத்தில் ஜாதிப் பாகுபாடுகள் ஓரளவுக்கு இதனால் குறைந்தன. அரசியல் களத்திலும், பொருளாதாரத் துறையிலும் இந்த இயக்கத்தின் தாக்கம் இருந்தது. தமிழ் மொழி சீர்திருத்தமும் ஏற்பட்டது.

தென்னக அரசாட்சி
மாடல்கள்!

This book, ‘Unequal, Why India Lags Behind to Neighbours’ examines the specific time periods when these regions experienced their respective human development acceleration:  Kerala (1820-1975) and Tamil Nadu (1916-to date).  It does not, therefore, comment on their present socio-political scenarios.

Despite their differences, the Southern Supermodels as early pioneers share four overarching similarities which added their human development advances.

இதன் தமிழாக்கம் வருமாறு:

குறிப்பிட்ட மாநிலங்களில் எந்த காலக் கட்டங்களில் மனிதவள மேம்பாடு அதிகரித்தது என்பதை இந்த நூல் விவரிக்கிறது. உதாரணமாக, கேரளாவில் 1820-1975; தமிழ்நாட்டில் 1916 முதல் இன்று வரை. மனிதவள மேம்பாடு அதிகரித்த காலக்கட்டங்களை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவை இரண்டும் வளர்ச்சியடைந்த காலக் கட்டங்கள் குறித்து ஆய்வு செய்தால் அங்கு ஏற்பட்ட மனிதவள மேம்பாடு பற்றிய தெளிவான புரிதல் நமக்கு ஏற்படுகிறது.

தென்னக அரசாட்சி மாடல்களில் பல ஒற்றுமைகள் இருந்துள்ளன. அவற்றின் தாக்கங்களால் கேரளா, தமிழ்நாடு மூன்றுமே மனிதவளத்துறையில் முன்னேற்ற மும் வளர்ச்சி காண முடிந்துள்ளது.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்
தாக்கம்

1938 இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் இந்த இயக்கத்தின் தாக்கத்தால் நடந்தன. அந்நிய மாநில மொழி திணிக்கப்படுவதை திராவிடர் இயக்கம் எதிர்த்தது. பார்ப்பனியமும், சமஸ்கிருதமும் ஹிந்தி மொழியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் ஹிந்தி மொழி தீவிரமாக எதிர்க்கப்பட்டது. இந்த மொழி சார்ந்த போராட்டம் நீதிக்கட்சியையும், சுயமரியாதைத் தோழர்களையும் ஒன்றிணைய வைத்தது. அதன் விளைவாக திராவிடர் கழகம் (தி.க.) உருவாயிற்று. தந்தை பெரியாரின் தலைமையில் இது மிகப்பெரிய மக்கள் இயக்கமாக வளர்ந்தது. இந்த சுயமரியாதை இயக்கம் காலப்போக்கில் ஓங்கி வளர்ந்து விரிவடைந்ததை உலகிற்கு விளக்கியது.’’

சுயமரியாதை இயக்கத்தின் நோக்கத்தையும், ஆக்கத்தையும்  இப்போது உலக ஆய்வறிஞர்கள் ஆய்வு செய்து பாராட்டு மழை பொழிகின்றனர்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின்
மாட்சி!

புதியதோர் சமூகம் காண, சமூகப் புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சியாக மலர்ந்து, ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ‘சூப்பர் மாடல்’ என்ற பாராட்டு வெளிச்சப் பாய்ச்சலோடு முன்னேறி வருகிறது ‘திராவிட மாடல்.’

ஆட்சிக்கும், அதன் திட்டங்களுக்கும் நமது மகிழ்ச்சியை வாரி வழங்குகிறோம்; கண்டு பூரிக்கிறோம். ‘திராவிட மாடல்’ ஆட்சி, புகழ் உச்சியில் இருப்பதைக் கண்டு காவிகள் எரிச்சல் அடைகின்றனர்.

ஆனால், இந்த ஆய்வு சொல்வதோ, விருப்பு – வெறுப்பற்ற மதிப்பீடு!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை  
20.6.2025  

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *