500 மதுக்கடைகள் மூட, ஆணை – பாராட்டுக்குரியது!

1 Min Read

முதலமைச்சர் தலைமையில் சிறப்போடு  பீடுநடைபோடும் ‘திராவிட மாடல்’ அரசு, சொன்னதைச் செய்யும் எடுத்துக்காட்டான அரசு என்பதற்கேற்ப 500 டாஸ்மாக் (மது விற்பனை) கடைகளை மூடும் ஆணை பிறப்பித்துள்ளது பெரிதும் பாராட்டி வரவேற்கத்தக்கது.

முழு மதுவிலக்கு 2026 ஆம் ஆண்டுக்குள் என்ற இலக்கு நோக்கி படிப்படியாக முன்னேற வேண்டுமென்பதும், அதன்மூலம் இளையதலைமுறை உள்பட அனைவரையும் பாதுகாக்க தி.மு.க. அரசு திருப்பத்தை ஏற்படுத்தியது என்ற நிலை உருவாகவேண்டும்.

கள்ளச்சாராய வேட்டை தொடர் பணியாக அமைதலும், அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்போடு மது ஒழிப்பு, குடிப் பழக்கத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் பல குழுக்கள் ஏற்படுத்தி, செயல்களுக்கு இணையாகப் பிரச்சாரமும் செய்வது மிகவும் அவசியமாகும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

22.6.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *