முதுமுனைவர் இராமர் இளங்கோ மறைவிற்கு இரங்கல்

1 Min Read

முதுமுனைவர்
ச.சு.இராமர் இளங்கோ (வயது 81) இன்று (19.6.2025) மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். பாரதிதாசன் ஆய்வுகளின் முன்னோடியாக விளங்கியவர்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பேற்ற பிறகு இந்த நிறுவனத்தை சிறப்பாக நடத்திக் காட்டியவர். இவர் காலத்தில்தான் அலெக்சாண்டர் துபியான்சுகி (உருசியா), பேராசிரியர் கா.சிவத்தம்பி (இலங்கை), முனைவர் முரசு. நெடுமாறன் (மலேசியா) எனப் பன்னாட்டு ஆய்வாளர்களைப் பணியில் அமர்த்தி நிறுவனத்தை உலகத் தரத்திற்கு மாற்றிக்காட்டினார்.

சென்னை பெரியார் திடலோடு நெருக்கமாக இருந்தவர்.

அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தி னருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

   தலைவர்

  திராவிடர் கழகம்

சென்னை

19.6.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *