முதுமுனைவர்
ச.சு.இராமர் இளங்கோ (வயது 81) இன்று (19.6.2025) மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். பாரதிதாசன் ஆய்வுகளின் முன்னோடியாக விளங்கியவர்.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பேற்ற பிறகு இந்த நிறுவனத்தை சிறப்பாக நடத்திக் காட்டியவர். இவர் காலத்தில்தான் அலெக்சாண்டர் துபியான்சுகி (உருசியா), பேராசிரியர் கா.சிவத்தம்பி (இலங்கை), முனைவர் முரசு. நெடுமாறன் (மலேசியா) எனப் பன்னாட்டு ஆய்வாளர்களைப் பணியில் அமர்த்தி நிறுவனத்தை உலகத் தரத்திற்கு மாற்றிக்காட்டினார்.
சென்னை பெரியார் திடலோடு நெருக்கமாக இருந்தவர்.
அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தி னருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
19.6.2025