கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

1 Min Read

சென்னை, ஜூன் 22– கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவ மாணவியர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவுற்ற நிலையில், அதனை நீட்டித்து அரசு உத்தர விட்டுள்ளது.

கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட சமூக மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்காக, அரசு தரப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு இணைய வழி வாயிலாக விண்ணப் பிக்க கடைசி நாளாக மே.31 அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பெற்றோர் மத்தியிலிருந்து எழுந்த வேண்டுகோளை அடுத்து, முடிவடைந்த கால அவகாசத் தினை மேலும் நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.

இதன்படி கல்லூரியில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி மாணவ மாணவியர் ஜூன் 30-க்குள், இணைய வழி வாயிலாக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்கள் மற்றும் இணைய வழி விண்ணப்ப நடைமுறைகளுக்கு அணுக வேண்டிய இணையதளம்: https://tnadtwscholarship.tn.gov.in/ எஸ்.சி., எஸ்.டி., மாணவ மாணவியர் கல்வி உதவித்தொகை தொடர்பான அய்யங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய கட்டண மற்ற தொலைபேசி எண்: 1800-599-7638. திங்கள் முதல் சனி வரையிலான வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *