அதிர்ச்சியூட்டும் தகவல்!

1 Min Read

சிறைக் கலவரத்தில் 41 பெண் கைதிகள் கொலை

தெகுசிகல்பா, ஜூன் 22 ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகர் தெகுசிகல்பா நகர் அருகே தமரா பகுதியில் மகளிர் சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில், மகளிர் மட்டுமே அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள மகளிர் கைதிகள் இடையே திடீரென வன்முறை ஏற்பட்டு உள்ளது. குழுக்களாக பிரிந்து மோதிக் கொண்ட   சம்பவத்தில் 41 கைதிகள் மரணம் அடைந்து உள்ளனர் என ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டு பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஜூலிஸ்சா வில்லானுவா கூறும்போது, பெண் கைதிகளின் உயிரிழப்புகள் வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். நாட்டின் சட்ட திட்டம் ஆனது, திட்டமிடப்பட்ட குற்றங்களால் கடத்தி செல்லப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டில் இதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்தது. அதில், ஆண்கள் மட்டுமே உள்ள சிறைகளில் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 40 கைதிகள் உயிரிழந்தனர். அந்நாட்டில் சிறையில் ஏற்பட்டு உள்ள கொடூர  வன்முறை கலகத்தில் பலர் பலியாகி உள்ள சம்பவம், மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில் நடந்து உள்ளது என ‘தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *