பண்ணந்தூர் பெரிய புளியம்பட்டி சின்னகண்ணன் மறைவு மாவட்ட கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கிருட்டினகிரி, ஜூன் 18- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் ஒன்றியம் பண்ணந்தூர் பாப்பாரப்பட்டி ஊராட்சி பெரியபுளியம்பட்டி தி.மு.க. மூத்த முன்னோடி கிளைக் கழக செயலாளரும் தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள்  நிர்வாகியுமான மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) இராஜசேகரன் மற்றும் பெங்களூர் (அறிவியல் அறிஞர்) திருஞானசம்பந்தம்  ஆகியோரின் தந்தையும், அரசம்பட்டி அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும் பகுத்தறிவாளர் கழக நிர்வாகியுமான ப. இளையராஜா, மாவட்ட ப.க.துணைச் செயலாளர் பொறியாளர் ப.செயக்குமார், பர்கூர் ஒன்றிய கழக செயலா ளர் ப.பிரதாப் ஆகியோரின் தாத்தாவும், கிருட்டினகிரி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் (பணிநிறைவு- RTO) சாமியின் மாமனாரும்  பணி நிறைவுப் பெற்ற தலைமை ஆசிரியருமான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது தீவிர பற்றுக் கொண்டவருமான திராவிட இயக்க கொள்கையாளர் பண்ணந்தூர் பெரிய புளியம்பட்டி திமுக கிளை செயலாளர் சின்னக் கண்ணன் (வயது 97) வயது மூப்புக்காரணமாக 14.6.2025 – இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிவிக்க வருந்துகிறோம்.

அரது மறைவு செய்தி அறிந்து மாவட்ட கழக சார் பில் 15.6.2025 – மதியம் ஒரு மணியளவில் கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ. திராவிடமணி தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, த.அறிவரசன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் அ.வெங்கடாசலம், பகுத்தறி வாளர் கழகம் ஜோதிபாசு, சுரேசு உள்பட கழகப் பொறுப் பாளர்களும் தோழர்களும் கலந்துக்கொண்டு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர். அன்னாரது உடல் அவரது பண்ணைத் தோட்டத்தில் மாலை 3.00 மணியளவில்  அடக்கம் செய் யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *