ரயில்வேயில் 6734 பணியிடங்கள் காலி

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன்18- அனைத்து ரயில்வே கோட் டங்களில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பிரிவு பணியிடங்கள் குறித்து விவரங்களை அளிக்குமாறு கடந்த 10-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் கோரியிருந்தது.

இதன்படி ரயில்வே சிக்னல், தொலைத் தொடா்பு உள்ளிட்ட பிரிவுகளில் நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் 51 பிரிவு களில் 6,734 தொழில்நுட்பப் பணியாளா்கள் இடங்கள் காலியாக உள்ளது என்ற விவரம் இணையவழியில் பதிவேற்றம் செய்யப்பட் டது. இந்த விவரங்கள் பெங்களூரில் உள்ள ரயில்வே பணியாளா்கள் சோ்ப்பு வாரியத்தின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை முறையாக ஆய்வு செய்து பணியாளா் தோ்வு நடத்துவது தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த முடிவை ரயில்வே ஊழியா் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது பாதுகாப்பான ரயில் பயணத்தை மேலும் உறுதி செய்ய முடியும். ஊழியா்களுக்கான பணி நெருக்கடி குறையும் என்று சங்கங்கள் தெரி வித்துள்ளன.

இதற்கு முன்பு ரயில்வே சிக்னல் மற்றும் தொலை தொடா்புத் துறையில் கடந்த 2017-ஆம் ஆண்டு கடைசியாக பணியாளா் சோ்க்கை நடைபெற்றது. அதன் பிறகு 8 ஆண்டுகளாக பல பணியிடங்கள் நிரப்பப் படாமலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *