சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா ”குடிஅரசு” ஏட்டின் நூற்றாண்டு விழா எழுச்சியோடு நடத்திட அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

viduthalai
2 Min Read

செந்துறை, ஜூன் 18- அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் செந்துறை பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகத்தில் 17.6.2025 செவ்வாய் மாலை 6 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன் கடவுள் மறுப்பு கூறினார். தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச் செல்வன் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி தொடக்க உரையாற்றினார்.

ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தின. ராமச்சந்திரன், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார், அரியலூர் ஒன்றிய செயலாளர்  த. செந்தில், எழுத்தாளர் செந்துறை மதியழகன், மாவட்டத் துணைச் செயலாளர்.க கார்த்திக், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன், மாவட்ட இ.அ.செயலாளர் க.மணிகண்டன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் வெ. இளவரசன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா. கருணாநிதி, மாவட்ட மகளிரணி தலைவர் க. ஜோதிமணி, மணப் பத்தூர் கலைமணி, காப்பாளர்கள் சி காமராஜ், சு. மணிவண்ணன், அரியலூர் மாவட்ட செயலாளர்  மு. கோபாலகிருஷ்ணன், மாநில ப.க அமைப்பாளர் தங்க.சிவ மூர்த்தி, மாவட்டத் தலைவர் விடுதலை.நீலமேகன், ஆகியோர் உரையாற்றியதை அடுத்து கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் பேசியதாவது, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா குடிஅரசு எட்டின் நூற்றாண்டு விழா ஆகியவற்றை செந்துறையில் எழுச்சியோடும் சிறப்போடும் நடத்துவது குறித்தும் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்ற விதத்தினையும் அரியலூர் மாவட்ட தோழர்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சி நடைபெறுவதற்கு கழகப் பொறுப்பாளர்கள் நிதி உதவி அளிக்க உறுதி யளித்தனர். விளாங்குடி விக்னேஷ், வடலூர் இந்திரஜித், குழுமூர் சுப்பராயன், கீழப்பழுவூர் அன்பரசன், புதுக்குடிசை பெ.சின்னத் துரை உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்

செந்துறையில் எதிர்வரும் 27.6.2025 வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு விழாவை எழுச்சியோடும் சிறப்போடும் நடத்திடுவதென ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு கழகத்தின் அனைத்து பொறுப்பாளர்களும் கழக தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் இணைந்து செந்துறையில் உற்சாக வரவேற்பளிப் பதென முடிவு செய்யப்படுகிறது.

தந்தை பெரியாரை உலகமய மாக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணியின் லட்சியத் திட்டமான பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பதெனவும், “விடுதலை” ஏட்டிற்கு சந்தா திரட்டி அளிப்பதெனவும் முடிவு செய்யப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *