லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 183ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

1 Min Read

இங்கிலாந்து நாட்டின்  ஆக்ஸ்போர்ட்டில் உலக தமிழர் வரலாற்று மய்யம் வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் 183ஆவது திருவள்ளுவர் சிலையினை ஆக்ஸ்போர்ட் மாநகரத்தின் கவுன்சிலர்கள்  ஸ் ரீபன்  வூட், சூசான் அன்ட் – மாஸ்கெல்  கெலன், முன்னிலையில் விஜிபி உலக தமிழ் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

அருகில் க்ளைடன்  மேயர் அப்புசாமி, மோரிசியஸ் மேனாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன்,  லண்டன் சிவா பிள்ளை, ஆஸ்திரேலியா எழுத்தாளர் சந்திரிகா சுப்பிரமணி, மல்லை தமிழ் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா, துபாய் மொய்தீன், ஆலந்தூர் மோகனரங்கன் அறக் கட்டளையின் பாட்டழகன், முனைவர் உலகநாயகி பழனி மற்றும் 20 நாடுகளில் இருந்து பல்வேறு கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

விஜிபி திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து வாழ்த்து செய்தி அனுப்பினார்.

லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 183ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *