அறுபடை (டிசைன்)தான் மிஞ்சும் – அறுவடை (வாக்கு) ஏதும் கிடைக்காது!– ஊசிமிளகாய் –

viduthalai
2 Min Read

தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வின் நிலை பரிதாபத்திற்குரியது.

காரணம், அது கிரிமினல்களின் ‘வேடந்தாங்கலாக’ மாறிவிட்டதோடு, மற்ற கூலிகள்தான் காவிகளின் பாதுகாப்புக்காகப் பயன்படலாம் என்று அரசியலில் புது வித்தைக்காரர்களாகி வலம் வருகிறார்கள்!

ஏற்கெனவே அதற்குத் தனிப் பெயரே ‘மிஸ்டு கால்’ கட்சி என்பதுதானே!

இன்றைய தமிழ்நாட்டு பா.ஜ.க.வின் தலைவர் முருகக் கடவுளிடம் தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவை விட்டுவிட்டு,அறுபடை வீடுகளுக்குச் சென்று கதவு தட்டுவது – அது தேர்தல் உத்தி. பக்தி போதைமூலம் வாக்குச் சீட்டை அவர்களிடமிருந்து பறித்து, தி.மு.க.வை மீண்டும் பதவிக்கு வரவிடாமல் செய்ய தலைகீழாக நின்று பார்க்கும் விசித்திர நிலை.

விடை: முழுக்க முழுக்க வடிகட்டிய ஏமாற்றம்தான் மிச்சம்.

திருப்பரங்குன்றம் முருகனிடம் மதக் கலவரம்மூலம்  கிடைக்காத காரணத்தால், மற்ற படை வீட்டு முருகன்களின் எஞ்சிய 5 படை வீட்டிற்கு மனு போட்டு, வேண்டுதல் செய்கின்றனர்!

முன்பு ஒரு பா.ஜ.க. முருகன் என்பவர், வேல் கொண்டு தமிழ்நாட்டில் யாத்திரை போனாரே! அவர் பெயருக்காவது, சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தலில் ஒருமுறைகூட ஜெயிக்கவில்லையே!

இரட்டைத் தோல்விக்குப் பிறகும், வீராப்பு, வீம்புப் பேச்சுக்குப் பஞ்சமில்லை!

பா.ஜ.க. முருகன் பெற்ற பழைய (தோல்வி) அனுபவம்தான் வரும் தேர்தலில் முருகன் மாநாடு – அறுவடையா, அறுபடையா?

அறுவடை என்றால், மிஞ்சியது அறுபடை(டிசைன்)தானே ஒழிய, அறுவடை (வாக்கு) அல்ல!

தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் பதவியேற்குமுன், ‘கேசவராம்’ வாழ்த்துப் பாடலைப் பாடி, அதுவும்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் முன்னிலையில், தமிழ்நாடகத்தை விட, நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்த னர் என்பது அவரே கூறியது!

லஞ்ச வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்ட னங்களுக்கு ஆளான சிவகாசிப் பேர்வழி ஒருவர், குலதெய்வம்  பூஜைகளை நள்ளிரவில் செய்து, ஒரு மணிநேரம் கண்மூடி தியானம் செய்கிறார். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் கிடைக்கவேண்டும் என்று சொன்னாலும், உண்மையில் அவர் சிக்கியுள்ள வழக்கிலிருந்து விடுதலையாகவே இப்படி ஒரு டிராமா?

அண்ணா பெயரில் கட்சி – இப்படி பலப் பல கூத்துகள்!

இராமனுடன் கூட்டுச் சேர்ந்த பிறகு – பெரியார், இராமனைச் செருப்பாலடித்தார் என்பதைத் தேர்தலுக்கு முன் நடந்திராதத் திசை திருப்பலைச் சொல்லியதால், இராமன் வெற்றியைத் தருவார் என்று ‘கப்சா’ விட்டுப் பார்த்தனர் – கடைசி நேரத்தில் முடிவு என்னாயிற்று?

அதற்குமுன் 138 இடங்கள் என்றிருந்த தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டப்பேரவையில் 184 ஆகக் கூடியது – வடநாட்டு ஆங்கிலப் பத்திரிகைகள்கூட, தமிழ் மண் இப்படி கடும்பாறையாக இருக்கின்றதே என்று வியந்தனர்!

புதிய காவிகளுக்கும், அவர்களிடம் அடகுப் பொரு ளாகிவிட்டவர்களுக்கும், அந்த வரலாறு மறந்துதான் முருகனிடம் சரணாகதி அடைந்தனர் போலும்!

‘‘எண்ணெய் செலவே தவிர, பிள்ளை இனி பிழைக்காது!’’

அறுவடை கிடைக்காது – அறுபடை வீடுகள் (டிசைன்) தான் மிஞ்சும்!

வடநாட்டில் முருகன் எப்படி எப்போது ‘‘சுப்ரமணிய சுவாமி’’, ‘‘ஸ்கந்தன்’’ ஆனார் என்பதும் இந்த எடுபிடி அரசியல்காரர்களுக்குத் தெரியுமா!

பிறகு சொல்கிறோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *