“ஒளிரும்” பயிர்கள்”

Viduthalai
1 Min Read

அரசியல்

பயிர்கள் எதையும் சொல்லாது. எனவே, விவசாயிதான் அவற்றுக்கு என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துத் தரவேண்டும். இந்த நிலையில் ‘இன்னர் பிளான்ட்’ தொழில்நுட்பம் விரைவில் மாற்றத்தைக் கொண்டு வர விருக்கிறது.

பயிர்களுக்கு நீர் போதவில்லை, பூச்சி, தொந்தரவு அதிகரித்து விட்டது என்றால், அவை ‘ஒளிர்வதன்’ மூலம் விவசாயிக்கு, தங்கள் வேதனையை தெரிவிப்பதாக அறியலாம்.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகா ணத்தைச் சேர்ந்த இன்னர் பிளான்ட் நிலையத் தின் விஞ்ஞானிகள். இந்த புதுமையை உருவாக்கியுள்ளனர்.

முதலில், தக்காளிச் செடியை இந்த வகையில் உருவாக்கி, விளைவித்து வெற்றி கண்டுள்ளனர். அடுத்து சோயா பயிர்களுக்கும் ஒளிரும் தன் மையை தர ஆய்வுகள் நடந்து வருகின்றன. நீர் போதாமை, பூச்சித் தாக்குதல், சத்துப் பற்றாக் குறை போன்ற மூன்று நிலைகளை தெரிவிக்க, மூன்று வகையில் இன்னர் பிளான்டின் பயிர்கள் ஒளிரும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பயிர்கள் ஒளிர்வதை, சிறப்பு கேமரா மூலம், செயற்கைக்கோளிலிருந்தே படம் பிடிக்க முடியும். எனவே தான், பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கும் ஒளிரும் தொழில்நுட்பம் பயன்படும்.

இப்போதே, ஜப்பானிய முதலீட்டாளர்கள், சோயாவை ஒளிர வைக்கும் நுட்பத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக, இன்னர் பிளான்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *