திருப்பத்தூர், ஜூன் 16- திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் ஆகஸட் 9, 2025 திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் திருப்பத்தூர் நகரில் நடத்துவதுற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனுமதி வழங்கியவுள்ளதை அடுத்து, பொதுக்குழு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம், 14.06.2025 அன்று மாலை 5.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன் வரவேற்பிலும் நடைபெற்றது. மேலும் பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்த செயல் திட்ட விளக்க உரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச்செயலாளர்
சி. எ. சிற்றரசன், சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த ஊமை ஜெயராமன், கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநில துணை பொதுச் செயலாளர் அண்ணாசரவணன் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் அனைத்து அமைப்புகளைச் சார்ந்த கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள். பங்கேற்ற மாவட்ட துணைத் தலைவர் சி.தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ. டி. ஜி. சித்தார்த்தன், மாவட்ட காப்பாளர் மா.சி.பாலன், மாவட்ட விடுதலை வாசகர் வட்டத்தலைவர் எம்.ஞானப்பிரகாசம், வ.புரட்சி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட துணைச்செயலாளர், எம். என். அன்பழகன் மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர், இரா. கற்பகவள்ளி மாவட்டத்தலைவர் மகளிரணி, நா. சுப்புலட்சுமி, வே. அன்பு மாவட்டத்தலைவர் ப. க., பெ. ரா.கனகராஜ் கந்திலி ஒன்றியத் தலைவர், இரா. நாகராசன் கந்திலி ஒன்றியச் செயலாளர், இராஜேந்திரன் சோலையார்பேட்டை அமைப்பாளர், கோ. திருப்பதி மாவட்டச்செயலாளர் ப. க.,கே. மோகன் மாவட்ட பெ. கட்டுமான தொழிலாளரணி செயலாளர், அக்ரிஅரவிந்த் நகர செயலாளர் இளைஞரணி, மோ. நித்தியானந்தம் மாவட்ட துணைதலைவர் இளைஞரணி, சு. குமரவேல் மாவட்ட துணைச் செயலாளர் ப. க.,கா. நிரன்ஜன் மாவட்ட அமைப்பாளர் இளைஞரணி, மோ. வசீகரன் மாவட்ட அமைப்பாளர் மாணவர் அணி,மு. வெற்றி மாதனூர் ஒன்றியத் தலைவர், வெங்கடேசன் மாவட்ட ஒன்றியச் செயலாளர், பச்சை முத்து ஏலகிரி பொறுப்பாளர், ரத்தினவேல் பொறுப்பாளர், பெரியார் செல்வம் இளைஞரணி, பிரபாகரன் – கற்பிபயிலகம், தனஞ்செயன் ஆகியோர் பங்கேற்றனர்.
நன்கொடை
பொதுக்குழுவிற்கு நிதி உதவியாக மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் ரூ. 50,000, மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன், ரூ50,000, அ. சீனி ரூ 10,000 ஆகியோர் வழங்கினார்கள்.
அக்ரி அரவிந்த் ரூ 25,000, இரா.கற்பகவள்ளி ரூ. 10,000, காளிதாஸ் சுப்புலட்சுமி 5,000, பெ.ரா.கனகராஜ் ரூ5,000 ஆகியோர் நிதி வழங்குவதாக உறுதி அளித்தனர்.
தீர்மானங்கள்
கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதை ஏ. டி. ஜி. சித்தார்த்தன் மாவட்ட துணைச்செயலாளர் வாசித்தார்.
மாவட்டத்தலைவர் கே. சி. எழிலரசனின் தந்தை சுயமரியாதை சுடரொளிச் கே.கே.சின்னராசு அவர்களின் தங்கையும்,
மாவட்ட மகளிரணி காப்பாளர் தாமரைகனியின் தாயாருமான எஸ்.பாக்கியம் (வயது 95) அவர்கள் அச்சமங்களத்தில் உள்ள அவரது இல்லத்தில் 05.06.2025 இரவு 8.00 மணிக்கு இயற்கை எய்தினார். சுயமரியாதைச் சுடரொளி எஸ். பாக்கியம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
திராவிடர் கழக பொதுக்குழு, ஆகஸ்ட் 9இல் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் திருப்பத்தூர் நகரில் நடத்த அனுமதி வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுவதோடு, திராவிடர் கழக பொதுக் குழுவை மிகச்சிறப்பாக மிகஎழுச்சியுடன் நடத்துவதெனவும்,
பொதுக்குழுவில் பெரியார் உலகிற்கு ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தியது போல குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என்று அதிக அளவில் நிதியை திரட்டி ஆசிரியரிடம் வழங்குவதெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞரணி நகரச்செயலாளர் க. முருகன் வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறினார்.