முப்பத்தி அய்ந்தாவது முறையாக வெளிநாட்டுப் பயணம் செய்யும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா?

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூன்.16- பிரதமர் மோடிக்கு 35-ஆவது முறையாக வெளி நாடு பயணம் செல்ல நேரம் உள்ளது. ஆனால் மக்க ளின் துயரம் தணியாமல் தொட ரும் மணிப்பூருக்கு செல்ல நேர மில்லையா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

அரசு முறை சுற்றுப் பயணம்

பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக மேற்கு ஆசி யாவில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந் துள்ள தீவு நாடான சைப்ரஸ், கனடா, குரேஷியாவுக்கு நேற்று (15.6.2025) புறப்பட்டு சென்றார். இந்த சுற்றுப் பய ணத்தின்போது கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.

விமர்சனம்

இனக்கலவரத்தால் பாதிக்கப் பட்ட மணிப்பூர் மாநிலத்தில் கல வரம் 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் தொடங்கியது. இதில் இது வரை 260 பேர் பலியாகி உள்ளனர்.

இனக்கலவரத்தால் பாதிக்கப் பட்ட மணிப்பூரில் கலவரம் தொடங்கிய பிறகு மோடி
35-ஆவது முறையாக தற்போது வெளிநாட்டு பயணம் மேற் கொண்டு உள்ளார். ஆனால் மணிப்பூர் செல்லாதது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி, மோடியை விமர்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூகவலைதள பதிவில் கூறியதாவது:-

வெளிநாடு போன்ற பய ணங்கள் மேற்கொள்ளும் பிரதமர் மோடிக்கு அனைத்து ஆற்றல், உற்சாகம் உள்ளது. ஆனால் மக்களின் துயரம், வேதனை மற்றும் துன்பம் தணியாமல் தொடரும் மணிப்பூருக்கு செல்ல முடியாதா? 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் மோடியின் 35-ஆவது வெளி நாட்டுப் பயணம் இது.

மணிப்பூரை இந்த அளவுக்கு மோசமாக நடத்தும் அளவுக்கு பிரதமர்  பரிதாபகரமானவர். இந்தியா மற்றும் கனடாவுக்கு பொருந்தும் சமன்பாடு குறித்து பிரதமர் மோடி பெருமையாக பேசிய ஒரு காலம் இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த விஷயங்கள் மிகவும் தவறாகி விட்டன.

பொருளாதார நாடு

இந்தியாவுக்கான அழைப்பை கனடா தாமதப்படுத்துவது போல் தோன்றிய போது, மோடியின் ஆதரவாளர்கள் கனடா அழைத்தாலும் அவர் செல்லமாட்டார் என்றனர். ஆனால் எப்போதும் போல, அவர் அம்பலப்படுத் தப்பட்டார். இந்தியா உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார ‘நாடாக இருப்பதால், ஜி7 அல்லாத பல நாடுகளுடன் ஜி7 உச்சி மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் கூறியுள்ளார். நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி கடந்த மே 24-ஆம் தேதி அன்று இந்தியா உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக மாறியது என கூறினார்.இதை மோடி கனடா பிரதமருக்கு நினைவூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *