உச்ச நீதிமன்றம் அனுமதி தந்தும் தற்காலிக நீதிபதிகளை நியமனம் செய்யாத உயர்நீதிமன்றங்கள்

1 Min Read

புதுடில்லி, ஜூன்.16- உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும் தற்காலிக நீதிபதிகளை நியமிக்க உயர் நீதிமன்றங்கள் ஆர்வம் காட்ட வில்லை என்று தெரிய வந்துள்ளது.

 வழக்குகள் நிலுவையில்….

இந்தியாவில் 25 உயர் நீதிமன் றங்கள் உள்ளன. அங்கு மொத்தம் 18 லட்சத்துக்கு மேற்பட்ட குற்ற வியல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

அந்த வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி களை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க அரசியல் சாசனத்தின் 224ஏ பிரிவு அனுமதி அளிக்கிறது.

அதை பின்பற்றி, ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிகநீதிபதிக ளாக நியமிக்க உயர் நீதிமன்றங்களுக்கு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கு மிகாதவகையில் தற்காலிக நீதிபதி களை நியமிக்கலாம் என்று கூறியது.

 கொலீஜியம் பரிந்துரை செய்யவில்லை

ஆனால், அந்த உத்தரவு பிறப் பித்து, 5 மாதங்கள் ஆகியும் எந்த உயர் நீதிமன்றமும் தற்காலிக நீதிபதிகளை நியமிக்க ஆர்வம் காட்டவில்லை என்று நீதிபதிகள் நியமன நடைமுறையை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எந்த உயர் நீதிமன்ற கொலீ ஜியமும் தற்காலிக நீதிபதிகள் பெயர்களை ஒன்றிய  சட்ட  அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித் துறைக்கு பரிந்துரை செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *