புதுடில்லி, ஜூன்.16- உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும் தற்காலிக நீதிபதிகளை நியமிக்க உயர் நீதிமன்றங்கள் ஆர்வம் காட்ட வில்லை என்று தெரிய வந்துள்ளது.
வழக்குகள் நிலுவையில்….
இந்தியாவில் 25 உயர் நீதிமன் றங்கள் உள்ளன. அங்கு மொத்தம் 18 லட்சத்துக்கு மேற்பட்ட குற்ற வியல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
அந்த வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி களை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க அரசியல் சாசனத்தின் 224ஏ பிரிவு அனுமதி அளிக்கிறது.
அதை பின்பற்றி, ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிகநீதிபதிக ளாக நியமிக்க உயர் நீதிமன்றங்களுக்கு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கு மிகாதவகையில் தற்காலிக நீதிபதி களை நியமிக்கலாம் என்று கூறியது.
கொலீஜியம் பரிந்துரை செய்யவில்லை
ஆனால், அந்த உத்தரவு பிறப் பித்து, 5 மாதங்கள் ஆகியும் எந்த உயர் நீதிமன்றமும் தற்காலிக நீதிபதிகளை நியமிக்க ஆர்வம் காட்டவில்லை என்று நீதிபதிகள் நியமன நடைமுறையை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எந்த உயர் நீதிமன்ற கொலீ ஜியமும் தற்காலிக நீதிபதிகள் பெயர்களை ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித் துறைக்கு பரிந்துரை செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது.