பெரியார் – அம்பேத்கர் சிலை என்றால் அச்சம் உலுக்குகிறதா? உ.பி.யில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு

viduthalai
1 Min Read

மகாராஜ்கஞ்ச், ஜூன் 16- வன்முறை சம்பவங்களின் கூடார மாக மாறி வரும் பாஜக ஆளும்  உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வார இடைவெளியில் மீண்டும் ஒரு  அம்பேத்கர் சிலை உடைக்கப் பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள்…

உத்தரப்பிரதேசத்தின் மகா ராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அமோதா  கிராமத்தில் உள்ள பூங்காவில் அம்பேத்கரின் சிலை உள்ளது. கடந்த 14.6.2025 அன்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் அம்பேத்கரின் சிலையை உடைத்துள்ளனர். இந்தத் தகவல் நேற்று (15.6.2025) காலை தெரியவர,  அமோதா கிராம மக்கள் பூங்கா அருகே கூடி போராட்டம் நடத்தினர். சிலையை சேதப்படுத்தியவர்களை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்து, காவல்துறை அதிகாரிகள் கிராமவாசிகளை சமாதானப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அமோதா கிராம மக்கள் போராட்டத்தைத் திரும்பப்  பெற்றனர்.

இந்நிகழ்வு தொடர்பாக குக்லி காவல் நிலைய ஆய்வாளர் கவுரவ் சிங் கூறுகையில்,”சட்டம் ஒழுங்கை பராமரிக்க பூங்காவைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் தெரியாத நபர்களைக் கண்டு பிடிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. குற்றம் செய்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என அவர் கூறினார்.

கடந்த வாரமும்…

இந்நிகழ்வு போன்று கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சக்கோதர் கிரா மத்தின் பூங்காவில் அம்பேத்கரின் சிலை  உடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *