அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து பலி எண்ணிக்கை 270ஆக அதிகரிப்பு

1 Min Read

அகமதாபாத், ஜூன் 15- அகமதாபாத் விமான விபத்து பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு 11 சடலங்கள் அடையாளம் கண்டு பிடிப்பு. டிஎன்ஏ சோதனை மூலம் நடவடிக்கை, உள்துறை செயலர் தலைமையில் விசாரணைக்குழு.

குஜராத்தில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையானது 270 ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய குழு அமைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட போயிங் 788 ட்ரீம் லைனர் விமானம் 30 விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. மருத்துவக் கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் விடுதியில் இருந்த மருத்துவ கல்லூரி மாணவர்களும் சிக்கினார்கள்.

விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்த நிலையில் ஒருவர் விமானத்தில் இருந்து குதித்து உயிர்தப்பினார். விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து மொத்தம் 265 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து மேலும் சில சடலங்களும், உடல் பாகங்களையும் மீட்பு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் மீட்புக் குழுவினருடன் தேசிய பாதுகாப்பு படை குழுவும் இணைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்தில் பலி எண்ணிக்கையானது 270ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *