மறைந்த தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் (ஓய்வு) பி.சபாநாயகம் அவர்களுக்கு நமது இரங்கல்!

1 Min Read

அரசியல்

முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக 1971 பொதுத்தேர்தலில் 184 இடங்களைப் பெற்று  அமைத்த ஆட்சியின் போது தலைமைச் செய லாளராக திரு.பி.சபாநாயகம் அய்.ஏ.எஸ். அவர்களை நியமித்தார். ஏற்கெனவே அவரை ரெவின்யூ போர்டு உறுப்பினராக வும்,  மின்சார வாரியத் தலைவராகவும் நியமித்திருந்தார்.

திரு.பி.சபாநாயகம் அய்.ஏ.எஸ். தலைசிறந்த ஆளுமைத் திறன் வாய்ந்தவர்; பெரிதும் தமக்குச் சரியென்று பட்ட கருத்தைக் கோப்புகளில் எழுதும் நேர்மையும், சுதந்திர உணர்வும் கொண்டு செயல்பட்டவர்.

1973-இல் தந்தை பெரியார் மறைவையொட்டி அவருக்கு அரசு மரியாதை கொடுக்க முதலமைச்சர் கலைஞர் முடிவு செய்த போது, தலைமைச் செயலாளராக இருந்து கடமையாற்றிய சீரிய பண்பாளர்.

வகுப்புரிமை ஆணை கர்த்தாவான எஸ்.முத்தையா (முதலியார்) அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினர் – திரு.பி. சபாநாயகம் அவர்கள்.

அவர் நியமனத்திற்கு 1971-இல் பெரியாரின் பங்கு பெரிதும் உண்டு என்பதை அருகில் இருந்தவர்கள் அறிவர்.

அவர் நிறை வாழ்வு (101 வயது) வாழ்ந்து மறைந்துள்ளார் என்றாலும் அவரது இழப்பு பேரிழப்பு ஆகும்.

அவரது குடும்பத்தினருக்கு நமது ஆறுதலும், ஆழ்ந்த இரங்கலும்! 

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம் 

சென்னை

22-6-2023

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *