டோக்கியோ, ஜூன் 14 ஜப்பானில் செயற்கை இரத்தத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஜப்பானின் செயற்கை இரத்தம் உலகளாவிய பயன்பாட்டிற்கும், சேமித்து வைப்பதற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், இது 2030 ஆம் ஆண்டு வாக்கில், அவசர மருத்துவ சேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ உலகில் ஒரு புரட்சி
பேராசிரியர் ஹிரோமி சாகாயின் தலைமையிலான குழு, இந்த செயற்கை இரத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த இரத்தத்தை இரண்டு ஆண்டுகள் வரை கெட்டுப்போகாமல் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காலாவதியான இரத்தத்திலிருந்து ஹீமோகுளோபினைப் பிரித்தெ டுத்து இந்த செயற்கை இரத்தம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, இரத்த வங்கிகள் மற்றும் மருத்துவ மனைகளுக்கு வழங்கப்படும் இரத் தத்திற்கு 42 நாள்கள் மட்டுமே ஆயுட் காலம் உண்டு. அதுமட்டுமின்றி, இரத்தம் பெறுபவரின் இரத்த வகையுடன் பொருந்துமா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஆனால், இந்த செயற்கை இரத்தத்திற்கு அந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லை.
2030-க்குள் பயன்பாட்டுக்கு வரும்?
தற்போது, தன்னார்வலர்களிடம் இந்த செயற்கை இரத்தம் பரிசோதிக் கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், 2030-க்குள் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அவசர மருத்துவ உதவிகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நோபல் பரிசுக்கு உரியது
இந்தக் கண்டுபிடிப்பு நோபல் பரிசுக்கு தகுதியானது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவிலும் இதே போன்ற ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு வருகின்றன. ஜப்பானிய ஆராய்ச் சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் ஒரு திருப்பு முனையாக அமையும். இதன் மூலம், அவசர காலங்களில் இரத்தம் கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். எனவே, இதுபோன்ற தருணங்களில் நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வாக இந்த செயற்கை இரத்தம் இருக்கும் என்று மருத்துவ உலகில் கருதப்படுகிறது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் செயற்கையாக உருவக்கப்படும் இரத்தம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறியிருப்பதால், இன்னும் சில ஆண்டுகளில் மருத்துவ உலகில் மிகப்பெரிய மைல் கல் எட்டப்பபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.