ஒசூர், ஜூன் 14- ஒசூர் மாவட்ட கழக காப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி அவர்களின் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்வு ஒசூர் கே.ஏ.பி மண்டபத்தில் தமிழியக்கம்,முத்தமிழ் மன்றம் திராவிடர் கழகம் இணைந்து நடத்தியது. இந்நிகழ்ச்சியில் விஅய்டி பல்கலைக்கழகம் நிறுவனர் முனைவர் கோ.விசுவநாதன் மறைந்த பேராசிரியர் கு.வணங்காமுடி அவர்களின் உருவப் படத்தை திறந்து வைத்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி அவர் பேசியதாவது
தமிழுக்காக பாதி நேரமும், தமிழருக்காக பாதி நேரமும் செல வழித்து தமிழை வளர்த்தவர் பேராசிரியர் வணங்காமுடி தமிழுக்காக தன்னையே அர்ப்பணித்து பல நூல்களை எழுதி யுள்ளார், அவருடைய புத்தகங்களை மறு பதிப்பு செய்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை தமிழியக்கம் செய்யும்,அதே போன்று தமிழுக்கு சேவை செய்பவர்களுக்கு அவர்களை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு தோறும் வணங்காமுடி பெயரில் விருது வழங்கப்படும், எங்க ஊரான குடியாத்தம் பகுதியில் பொதுவுடமைக் கொள்கை கொண்டவர்கள். அதிகம் நானும் சிறுவயதில் பொதுவுடைமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு பின்பு தந்தை பெரியார், திராவிடர் கொள்கையால் ஈர்க்கப்பட்டேன். மூடநம்பிக்கையிலிருந்து சமுதாயத்தை விடுவிக்க வணங்காமுடி தொடந்து பாடுபட்டு வந்தார் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் என்ற தீர்மானத்தை தமிழியக்கம் நிறைவேற்றி அதை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்தோம். மராட்டிய மாநிலம், கருநாடக மாநிலத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதனை செய்ய வேண்டும் என தீர்மானம் போட்டு உறுதியாக இருந்தவர் பேராசிரியர் வணங்காமுடி அவர் சமூக சீர்திருத்த கருத்துகளை அதிகம் பரப்பி வந்தவர் ஆவார். அவர் விட்டு சென்ற பணியை தொடருவோம். அவரது குடும்பத்தினர்க்கு உறுதுணையாக இருப்போம் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கவியருவி அப்துல்காதர்,திராவிடர் இயக்க சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன்,பாவலர் அறிவுமதி, கவிஞர் நெல்லை ஜெயந்தன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.மனோகரன்,ஒசூர் பெருமாள் மணிமேகலை கல்வி நிறுவனங்கள் தலைவர் பெ.குமார்,தமிழியக்கம் பொருளாளர் வே.பதுமனார்,தமிழியக்கம் மாநில செயலாளர் மு.சுகுமார், மாநில இலக்கிய அணி ஒருங்கிணைப்பாளர் தமிழியக்கம் கருமலை தமிழாழன்,திமுக அவைத்தலைவர் அ.யுவராஜ், கருநாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் முத்துமணி நன்னன், மாவட்ட கழக தலைவர் சு.வனவேந்தன்,ஒசூர் தமிழ்ச்சங்கம் கவிஞர் எல்லோரா மணி, பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம்,த.மு.எ.க.சங்கம் மாவட்ட செயலாளர் ஆடிட்டர் பாலசுந்தரம், முத்தமிழ் மன்றம் பொருளாளர் வெற்றி ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றம் தொகுதி செயலர் செந்தமிழ், ம.ம.க.மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம்,அறம் இலக்கிய அமைப்பு செயலாளர் அ.க.ராசு,தமிழ்தேசக் குடியரசு இயக்கம் க.இரா.தமிழரசன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி பொதுக்குழு உறுப்பினர்கள் அ.செ.செல்வம்,கோ.கண்மணி, மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, துணைச் செயலாளர் ச.எழிலன், மாநகர தலைவர் து.ரமேஷ், பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட செயலாளர் செ.பேரரசன், துணை தலைவர் வே.ரமேஷ்வரன், மாவட்ட மகளிரணி செயலாளர் அ.கிருபா, ஒசூர் மாநகராட்சி உறுப்பினர் பாக்கியலட்சுமி, மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் க.கா.சித்தாந்தன், வாசு,தருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடங்கும் முன்பு விஅய்டி வேந்தர் விசுவநாதன், பேராசிரியர் வணங்காமுடி இல்லம் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரித்தார்.