அதென்ன அனாலெம்மா (Analemma)? விண்ணில் சூரியன் போடும் எட்டு!

1 Min Read

அனாலெம்மா என்பது ஓர் ஆண்டு காலத்தில், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் சூரியனை புகைப்படம் எடுத்தால், அத்தனை சூரியன்களின் நிலைகளும் ஒரு எட்டு வடிவ வளைகோட்டை உருவாக்கும். இந்த எட்டு வடிவ வளைகோடுதான் ‘அனாலெம்மா’ என்று அழைக்கப்படுகிறது.

நீங்கள் சரியான பொங்கல் அன்று சூரியனை உயரமான ஒரு இடத்தில் இருந்து படம் எடுங்கள் இப்படி அடுத்த பொங்கல் வரை நாள்தோறும் படம் எடுத்த பிறகு அதனை ஒப்பிட்டுப் பார்த்தால் ஓராண்டில் சூரியன் பயணம் அதில் படமாகி இருக்கும்.

சூரியனை வானத்தில் ஒரு புள்ளியில் குறித்துக்கொண்டே வந்தால், அந்த புள்ளிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு “8” போன்ற வடிவத்தை உருவாக்கும். அதுதான் அனாலெம்மா.

இது ஏன் உருவாகிறது?

அனாலெம்மா உருவாக இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. பூமியின் சாய்ந்த அச்சு (Axial Tilt): பூமி அதன் அச்சில் சுமார் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது. இதன் காரணமாக, சூரியன் வானத்தில் ஒரு ஆண்டுக்குள் வடக்கு மற்றும் தெற்கு திசைகளுக்கு இடையில் நகர்வதாகத் தோன்றும். இது அனாலெம்மாவின் செங்குத்து பரிமாணத்தை (மேல்-கீழ் நகர்வு) உருவாக்குகிறது.

பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதை (Elliptical Orbit): பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் சில சமயங்களில் பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் (பெரிகேலியன்) மற்றும் சில சமயங்களில் தொலைவில் இருக்கும் (அப்போகேலியன்). பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும்போது வேகமாக நகரும், தொலைவில் இருக்கும்போது மெதுவாக நகரும். இந்த வேக மாறுபாடு, சூரியன் வானத்தில் கிழக்கு-மேற்கு திசையில் மாறுபடுவதாகத் தோன்றும். இது அனாலெம்மாவின் கிடைமட்டப் பரிமாணத்தை (இடது-வலது நகர்வு) உருவாக்குகிறது.

இந்த இரண்டு காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவாக, நாம் வானத்தில் சூரியனின் எட்டு வடிவ அனாலெம்மாவைப் பார்க்கிறோம்., சூரியக் கடிகாரங்களை வடிவமைக்கவும் பருவநிலை மாறுபாட்டை கண்டறியவும், இது பெரிதும் கைகொடுக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *