வாசிங்டன் ஜூன்.13- அமெரிக்கா வில் பாலியல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்ற வாளிகளுக்கு சிறையில் தண்டனை நிறைவேற்றபட்டது.
மரண தண்டனை
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என அய்நாவின் மனித உரிமைகள் ஆணையம் உள்பட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இதனால் பெரும்பாலான நாடுகளில் இந்த மரண தண்டனை வழங்கப்படும் வழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அய்ரோப்பா நாடுகளில் மரண தண்டனை அறவே நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அரிதிலும் அரிதாகவே மரண தண்டனை கொடுக்கப்படுகிறது.
அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மட்டுமே அமெரிக்கா நிறைவேற்றி வருகிறது.
37 ஆண்டுகளுக்குப் பிறகு
அந்தவகையில் அமெரிக் காவில் 2 குற்றவாளிகளுக்கு தற் போது மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கிரி கோரி ஹன்ட். 1988-ஆம் ஆண்டு தன்னுடைய 32 வயதில் கேரன் லேன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கேரன் லேன் வீட்டிற்குள் கிரி கோரிஹன்ட் புகுந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.பின்னர் அவரை அடித்து உதைத்து கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கேரன் லேன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை தொடர்ந்து கிரிகோரி ஹன்ட் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அட்மோர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தற்போது சுமார் 37 ஆண்டுகளுக்கு பிறகு சிறை யில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நைட்ரஜன் வாயு செலுத்தி அவர் கொல்லப்பட்டார்.
31 ஆண்டுகளுக்குப் பிறகு
புளோரிடாவை சேர்ந்தவர் ஆண்டனி வேய்ன்விரிட். கடந்த 1994-ஆம் ஆண்டு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த போது அங்கு கார் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டிருந்த கார்மேன் கியேஹார்ட் (23) என்பவரை கடத்தி கொண்டு போய் பாலியல் வன்கொடுமை செய்தார். அதில் கார்மேன் உடலில் படுகாயம் ஏற்பட்டு இறந்தார். இது தொடர்பாக ஆண்டனியை கைது செய்தநிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் ஸ்டார்க் நகர சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு சுமார் 31ஆண்டுகளுக்கு பிறகு விஷஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படுவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது கிடையாது. அதற்கு பதிலாக விஷ ஊசி செலுத்துவது, விஷவாயுவை பயன்படுத்தி குற்றவாளியை சுவாசிக்க செய்வது, மின்சாரம் பாய்ச்சுவது ஆகிய முறைகளில் மரண தண்டனை நிறைவேற்றும் வழக்கமே உள்ளது. மேலும் தனக்கான தண்டனையை குற்றவாளியே தேர்வு செய்யும் முறையை அமெரிக்கா பின்பற்றுகிறது.