வாரணாசி, ஜூன் 13 காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி பக்தர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.5,000 பெற்று மோசடி செய்தது தொடர்பாக 21 போலி பண்டிதர்களை உ.பி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உ.பி. மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. வாரணாசி நாடாளுமன்ற உறுப்பி னரான பிரதமர் மோடியின் முயற்சியால் இக்கோயில் பல ஆயிரம் கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டது. இதன் பிறகு இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
பக்தர்களிடம்
ஏமாற்று வேலை
இதனை சாதகமாக்கிய இளைஞர்கள் கும்பல் ஒன்று தங்களை கோயிலின் அதிகாரப்பூர்வ பண்டிதர்கள் என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளது. பக்தர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பெற்று சிறப்பு தரிசனம் செய்து வைப்பபதாக கூறி இவர்கள் ஏமாற்றி வந்துள்ளனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு காசி விஸ்வ நாதர் கோயிலின் தலைவரும், வாரா ணசி மண்டல ஆணையருமான தமிழர் எஸ்.ராஜலிங்கம் உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய வாரா ணசி காவல்துறையினர் இதுவரை 21 போலி பண்டிதர்களை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து வாராணாசியின் தமிழ் அதிகாரியான காவல் துணை ஆணையர் டி.சரவணன் கூறும்போது, “இதற்காக ஒரு காவல் படை அமைத்து அப்பாவி பக்தர்கள் போல் கோயிலைச் சுற்றி நடமாட வைத்தோம். அப்போது அவர்களை அணுகிய போலி பண்டி தர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தோம். மோசடியில் தொடர்பு டைய மேலும் சிலரை தேடி வருகிறோம். கோயில் பெயரில் செயல்படும் போலி இணைய தளங்கள் மீதும் சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.
காவல்துறை
நடவடிக்கை
இந்த போலி இணையதளங்கள் மூலமாகவும் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெறுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு, ருத்ராட்ச மாலைகள், பிரசாத விற்பனை உள்ளிட்டவை பெயரிலும் மோசடி நடைபெறுகிறது. இது தொடர்பாகவும் வாரணாசி சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.