விஜயவாடா, ஜூன்.11-ஆந்திர அரசு இணையர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை வெளியிட உள்ளது. அதாவது அதிக குழந்தைகள் பெற்றால் ஊக்கத் தொகை வழங்க பரிசீலனை செய்து வருகிறதாம்.
மக்கள் தொகை
நம் நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்கக்கூடும். அதனால் மக்கள் தொகையை கட்டுப் படுத்திய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதால் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மறுசீரமைப்பை தள்ளி வைக்கவேண்டும் என்று தென் மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தநிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தனது மாநிலத்தில் மகப்பேறு விகிதம் குறைவ தால் ஏராளமான பிரச்சினை களை சந்திப்பதாகவும், அத னால் மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்காக ஒருதிட்டத்தையும் அவர் அறிவிக்க இருக்கிறார். அது என்ன வென்று பார்ப்போம்.
புதிய அறிவிப்பு
ஆந்திர மாநில முதலமைச்சர்யாக சந்திரபாபு நாயுடு பத வியேற்று 12-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதையொட்டி, மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட சந்திர பாபு நாயுடு தயா ராகி வருகிறார். அவற்றில், அதிக குழந்தைகள் பெறும் இணையர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும் அடங்கும்.
முன்னர் ஆந்திராவில்
ஒரு காலத்தில் மக்கள்தொகை அதிகரித்ததால், அதை கட்டுப்படுத் துவதற்காக, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
ஊக்கத்தொகை
தற்போது, அதற்கு பதிலாக, அதிக குழந்தைகள் பெறுவதையும் ஊக்குவிக்கும் வகையில், இணையர் களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. ஆந்திராவில் மகப்பேறு விகிதம் சரிந்து வருவதே இதற்கு காரணம். இதுகுறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
ஆந்திராவில் மகப்பேறு விகிதம் குறைந்து வருவதால், நிறைய பிரச்சினை களை சந்திக்க வேண்டி உள்ளது. அதனால், அதிக குழந்தைகளை பெறும் இணையர்களுக்கு ஊக்கத் தொகை அறிவிக்க பரிசீலித்து வருகிறோம். இது, மனித மூலதனத்தில் செய்யப்படும் முதலீடு. ஒரு குடும்பத்தை ஒரு தொழிற்சாலையாக எடுத்துக் கொள் ளலாம். பெரிய குடும்பங்களுக்கு பெரிய அளவில் ஊக்கத்தொகை கிடைக்கும்.
பேறுகால விடுப்பு
தெலங்கானா மாநிலம் உருவான தால், அதனிடம் நிறைய தொகுதிகளை இழந்து விட் டோம். அதனால், தென்னிந்தியாவில் மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அப்போது தான் இந்தியா உறுதித்தன்மை அடையும். மக்கள்தொகையை அதிகரிக்கும் வகையில், அரசு பெண் ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பேறுகால விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளோம். இதற்கு முன்பு, 2 தடவை மட்டுமே எடுக்க முடியும் என்ற விதிமுறை இருந்தது.
ரூ.15 ஆயிரம்
பணியிடங்களில் குழந்தை பரா மரிப்பு மய்யம் அமைப்பது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள் ளது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை குழந்தையின் தாயார் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.