புதுடில்லி, ஜூன் 11 பதினொரு ஆண்டுகால மோடி ஆட்சி எவ்வாறு உள்ளது என்பதற்கு மணிப்பூரே சாட்சி என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே தெரி வித்தார். பிரதமா் மோடி தலை மையில் பாஜக ஆட்சி அமைத்து 11 ஆண்டுகளானதையொட்டி, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று (9.6.2025) வெளியிட்ட பதிவு:
மணிப்பூரே சாட்சி
கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்புக்கு மோடி அரசு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலினத்தவா், பழங்குடியி னா், பிற்படுத்தப்பட்டவா்கள், சிறுபான்மையினா் மற்றும் அடித் தட்டு மக்கள் மீதான சுரண்டல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பாஜகவின் நிர்வாக தோல்விக்கு மணிப்பூரில் முடிவுக்கு வராத வன்முறையே மிகப் பெரிய சாட்சி.
அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சா்வாதி கார மையைத் தேய்ப்பதில் 11 ஆண்டுகளை மோடி அரசு வீணடித்துள்ளது என்றார்.
‘கனவுகள் விற்பனை’
மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்தியில் ஆட்சி அமைத்து 11 ஆண்டுகளானதை மோடி அரசு கொண்டாடும் வேளையில், மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த வலி மிகுந்த செய்தி நாட்டு நடப்பை பிரதிபலிக்கிறது. அங்கு ரயிலில் இருந்து கீழே விழுந்து பலா் உயிரிழந்துள்ளனா். பல கோடி பேரின் உயிர்நாடியாக உள்ள ரயில்வே, தற்போது பாதுகாப்பின்மை, கூட்ட நெரிசல் மற்றும் அலங்கோலத்தின் அடை யாளமாக மாறியுள்ளது.
பொறுப்போ, மாற்றமோ இல்லாத பிரசாரம் மட்டுமே செய்யும் அரசாக 11 ஆண்டுகால மோடி ஆட்சி உள்ளது. நிகழ் காலம் குறித்து பேசாமல், 2047-ஆம் ஆண்டில் நிறைவேற வேண்டிய கனவுகளை ஒன்றிய அரசு தற்போது விற்பனை செய்து வருகிறது என்று சாடினார்.
மோடி அரசின் ‘பொய்’ வாக்குறுதிகள் – நூல் வெளியீடு
பதினொரு ஆண்டுகால மோடி அரசின் ‘பொய்’ வாக் குறுதிகள் அடங்கிய சிறு நூலை காங்கிரஸ் நேற்றுமுன்தினம் (9.6.2025) வெளியிட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் 11 ஆண்டுகளாக மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. இந்தக் காலத்தில் மோடி அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், அதிகரிக்கும் பட்டினி, வளா்ச்சி விகிதத்தில் தேக்கம் உள்ளிட்டவற்றை சுட்டிக் காட்டும் சிறுநூல்களை காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்டது.
இதுதொடா்பாக டில்லியில் அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆராய்ச்சி துறைத் தலைவா் ராஜீவ் கவுடா, அக்கட்சியின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளா் மஹிமா சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொய்யான செய்திகள் மற்றும் பிரச்சாரத்தில் கைதோ்ந்ததாக ஒன்றிய அரசு உள்ளது. இதை வெளிப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் சார்பில் ‘ஏக் ஔா் பார் ஜும்லா சா்கார்’, ‘11 சால் ஜூட்டே விகாஸ் கே வாதே’ ஆகிய 2 சிறுநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பாஜக 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் அறிக்கையிலும், அதன் பின்னா் அளித்த வாக்குறுதிகளும் ‘ஏக் ஔா் பார் ஜும்லா சா்கார்’ இச்சிறுநூலில் ஆராயப் பட்டுள்ளன. பாஜகவின் வெற்று வாக்குறுதிகளை ‘11 சால் ஜூட்டே விகாஸ் கே வாதே’ சிறுநூல் விரிவாக அம்பலப்படுத்துகிறது. 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பொய் வாக்குறுதிகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று தெரி வித்தனா்.