தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்!

1 Min Read

சென்னை, ஜூன் 10- அய்.டி.அய்.யில் இயந்திரவியல் டெக்னீசியன், ஒயர்மேன், வெல்டர் தொழில் பிரிவுகளுக்கு வரும் ஜூன் 13ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும்  அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2025ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 2 ஆண்டு தொழில் பிரிவுகளான இயந்திரவியல் டெக்னீசியன், ஒயர்மேன் மற்றும் ஓராண்டு தொழில் பிரிவுகளான தானியங்கி உற்பத்தி, இன்பிளான்ட் லாஜிஸ்டிக்ஸ், வெல்டர் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

விண்ணப்பம்

நேரில் வந்தோ www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பங்களை பெற்று வரும் ஜூன் 13ஆம் தேதிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். வெல்டர் மற்றும் ஒயர்மேன் தொழிற்பிரிவுகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சிகள் முடிந்தவுடன் நேர்காணல் நடத்தப்பட்டு தொழில் நிறுவனங்களில் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *