திருக்குவளை வட்டம் குண்டையூர் கிராமத்தில் உள்ள மய்யப் பகுதி வீடுகளுக்குள் மழைக் காலத்தில் தண்ணீர் உள் புகுகின்றது. தண்ணீர் வடியாமல் தேங்கி சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து நேரடியாகப் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மாவட்ட ஆட்சியர் ஏனோ எடுக்கவில்லை.
மழைக் கால நீர் சாலை வழியாக போய் குளங்களில சேரும். ஒரு சிலர் வீட்டு வாசல் சாலையில் மண் போட்டு உயர்த்தி, சாலையையும் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் தண்ணீர் வடியாமல் பறிப்பு ஏற்படுகிறது. எனவே வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மக்களின் வேதனையைப் போக்கி சுகாதாரக் கேடுகள் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
– ஆர். ரெங்கநாதன்
(கீழையூர் ஒன்றிய கழக தலைவர்), குண்டையூர்