ரயில் விபத்துக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா (UBT) கட்சித் தலைவர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆதித்ய தாக்கரே கூறியதாவது:- ரயில்வே அமைச்சர் (அஷ்வினி வைஷ்ணவ்) ரீல் அமைச்சராகியுள்ளார். கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக பயங்கரமான பல ரயில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், எந்தவொரு பொறுப்பையும் ஏற்ப ஒருவர் கூட முன்வரவில்லை. ரயில்வே துறை மற்றும் ரயில்வே அமைச்சர் மட்டுமுமா இந்த விபத்துக்களுக்கு பொறுப்பு. இந்திய மக்கள் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என பல முறை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அதை கடந்து செல்கிறார்.இவ்வாறு ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.