பாட்னாவில் தமிழர்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

1 Min Read

அரசு, இந்தியா

பாட்னா, ஜூன் 24- எதிர்க் கட்சித் தலைவர்கள் பாட்னா வில் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி னார்.  பாட்னா தமிழ்ச் சங்கத் தலைவர் என்.சரவணகுமார் அய்ஏஎஸ், செயலாளர் மகா தேவன் தலைமையில் 20 தமிழர் கள் முதலமைச்சரைச் சந்தித் தனர். இவர்களில், அய்ஏஎஸ் அதிகாரிகளான கே.செந்தில் குமார், தியாகராஜன், சஜ்ஜன், மூத்த அய்பிஎஸ் அதிகாரிகள் ரவீந்திரன் சங்கரன், அவரது மனைவி  மலர்விழி, அய்எப்எஸ் அதிகாரி கணேஷ்குமார் உள் ளிட்டோரும் இடம் பெற்றி ருந்தனர்.

தனித்தனியே அனைவரை யும் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் என்.சரவணகுமார், “பீகாரில் தமிழர்கள் எண் ணிக்கை குறித்தும் அவர்களது குழந்தைகள் தமிழ் பயில்கிறார் களா என்றும் முதலமைச்சர் ஆர்வமுடன் கேட்டறிந்தார். 

தமிழ் கற்றுத் தரத் தமிழ் இணையக் கல்விக் கழகம் உதவத்  தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது” எனக் கூறி உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *