கரோனாவை தடுக்க நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்ததாக பரவும் தகவல் தவறானது என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என எச்சரித் துள்ளது. WHO மற்றும் ஒன்றிய சுகாதாரத் துறை என்னென்ன வழிகாட் டுதல்களை வழங்குகிறதோ அதைதான் அரசு செயல் படுத்தும் என்றும் அறி வித்துள்ளது.
முதுகலை கணினி ஆசிரியர் வேலை கல்வித் தகுதி
அரசாணை வெளியீடு
அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணினி ஆசிரியர் வேலை கல்வித் தகுதியை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎட் படித்திருக்க வேண்டும், அல்லது எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் எம்எஸ்சியுடன் ஒருங்கிணைந்த பிஎஸ்சி பிஎட் படிப்பு, அல்லது பிஏ பிஎட் படித்திருக்க வேண்டும். இளங்கலை பட்டமும், முதுகலை பட்டமும் ஒரே பாடத்தில் படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.